×
 

NO REPOLL..! மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரை இல்லை..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

தமிழகம் மற்றும் மேற்கு வங்க தேர்தல்களில் மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் உள்ள 75,026 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் பங்கேற்றனர். தேர்தல் ஆணையத்தின் உத்தேச தரவுகளின்படி, மொத்த வாக்குப்பதிவு சதவீதம் வரலாற்று உயர்வாக 85.15 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இது 2021 தேர்தலைவிட சுமார் 11.52 சதவீதம் அதிகமாகும். ஆண்கள் 83.57 சதவீதம், பெண்கள் 85.76 சதவீதம், மூன்றாம் பாலினத்தவர்கள் 60.49 சதவீதம் வாக்குகள் பதிவு செய்தனர். இந்த உயர் வாக்குப்பதிவு தமிழ்நாட்டின் ஜனநாயக உணர்வை பிரதிபலிப்பதாக பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்த உடனேயே, தேர்தல் அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குகளின் விவரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

பொதுவாக, வாக்குப்பதிவின் போது ஏதேனும் குளறுபடி, இயந்திரக் கோளாறு, வன்முறை அல்லது பிற முறைகேடுகள் ஏற்பட்டால், அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை செய்யப்படும். இத்தகைய பரிந்துரைகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு, அவர்களின் அனுமதியுடன் மறுவாக்குப்பதிவு நடைபெறும்.

இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதியில் போலி வாக்கு..! ஏமாற்றிய நபரை பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!

ஆனால், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இத்தகைய எந்த மறுவாக்குப்பதிவு பரிந்துரையும் எந்த வாக்குச்சாவடியிலிருந்தும் வரவில்லை என தேர்தல் ஆணையம் தெளிவாக அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலிலும் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரைக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வியப்பா இருக்கு..! ஏளனமா பேசுனவங்களுக்கு பதிலடி கொடுத்துட்டீங்க...! நன்றி கூறிய விஜய்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share