×
 

தேர்தல் பறக்கும் படையின் அதிரடி சோதனை..!! உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட வைரக் கற்கள் பறிமுதல்..!!

தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 40 வைரக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கான சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், கட்சிகளிடையே தீவிரமான ஆயத்தங்களையும் ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இவை அனைத்துக்கும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மிக தீவிரமாக சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. எந்த விதத்திலும் தவறு நடந்து விடக்கூடாது என்பதை தீவிரம் காட்டி வருகின்றனர். நேற்றைய தினம் வேலூர் மாவட்ட மேயரின் கார் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையிலும் பல்வேறு இடங்களில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிரடி! தவெக-வினர் வைத்திருந்த பரிசு பொருட்கள் பறிமுதல்!

இந்த நிலையில், மாதவரத்தில் வைரக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாதவரம் அருகே உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட 40 வைரக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 40 வைரக் கற்களை பறிமுதல் செய்த மாதவரம் வருவாய் துறை கோட்டாட்சியர் அதனை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார். 

இதையும் படிங்க: தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share