5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தடை நீட்டிப்பு..! நெருங்கியது இறுதி விசாரணை... பெரும் எதிர்பார்ப்பு..!!
5 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் இந்தத் தடையை செப்டம்பர் 28ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த வழக்கின் இறுதி விசாரணை அந்தத் தேதியில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சில உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்தத் தொகுதிகள் காலியாகின.
முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றாலும், பெரம்பூர் தொகுதியைத் தேர்ந்தெடுத்து திருச்சி கிழக்கை ராஜினாமா செய்தார். கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகளில் வெற்றி பெற்ற முன்னாள் அதிமுக உறுப்பினர்களும் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் இந்த ஐந்து தொகுதிகளும் காலியாக அறிவிக்கப்பட்டன.இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து தனித்தனியான தேர்தல் மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்த மனுக்களில் சிலர் தங்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். தேர்தல் வழக்குகள் முடிவடையும் வரை இடைத்தேர்தல் நடத்துவது சட்டரீதியான சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும், ஒரு தொகுதிக்கு இரண்டு உறுப்பினர்கள் என்ற நிலை உருவாக வாய்ப்புள்ளது என்றும் வாதிடப்பட்டது. இந்த அடிப்படையில், பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து, தேர்தல் ஆணையம் இந்த ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடக்கூடாது என உத்தரவிட்டது. பின்னர் இந்தத் தடை பல முறை நீட்டிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் தரப்பில், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய வழிகாட்டுதல்களின்படி, தேர்தல் மனுக்கள் முடியும் வரை இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அகற்றப்படாத அரசியல் போஸ்டர்கள்... தாராபுரத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தும் அலட்சியம்...!
இதையடுத்து நீதிமன்றம் தடையைத் தொடர்ந்து நீட்டித்து வந்தது.இதற்கிடையே பெருந்துறை தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கு நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து ஜெயக்குமார், பெருந்துறை தொகுதிக்கான தடையை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் முறையிட்டார். இருப்பினும், ஒட்டுமொத்த வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளதால், அந்தத் தேதி வரை தடை தொடர்வதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் களமிறங்கும் நாதக..! வேட்பாளர் பட்டியலை வெளியிடும் சீமான்..!! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!