×
 

இரட்டை இலை யாருக்கு? தொடரும் பிரச்சனை..தேர்தல் ஆணையத்துக்கு பறந்த அதிரடி உத்தரவு!

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் விசாரணை குறித்து எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

2017 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அதிமுகவில் இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இடையே பிளவு ஏற்பட்டது. இது இரு தரப்பினரும் கட்சியின் கட்டுப்பாடு மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோருவதற்கு வழிவகுத்தது. 2022 ஆம் ஆண்டு, இ.பி.எஸ். தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த பொதுக்குழு தீர்மானங்கள் சட்டவிரோதமானவை என ஓ.பி.எஸ். தரப்பு வாதிட்டது.

இதனையடுத்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு 4 வாரங்களுக்குள் மனு மீது முடிவெடுக்க உத்தரவிட்டது. டிசம்பர் 19, 2024க்குள் தேர்தல் ஆணையம் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., மற்றும் பிற தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் கோரியது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இந்த தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. 

இதையும் படிங்க: நொந்து போன மா விவசாயிகள்.. உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.. இபிஎஸ் வலியுறுத்தல்..!

இதனிடையே, உரிமையியல் வழக்குகள் முடியும் வரை இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்ற வழக்குகளை எதிர்த்து இபிஎஸ் மனு தாக்கல் செய்திருந்தார். இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வானது, பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரித்தது. உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்த நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் விசாரணை குறித்து எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: எல்லாம் நாசமா போச்சு.. அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்.. விளாசிய இபிஎஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share