"தனது மகன் மிதுன் அரசியலுக்கு வருகிறாரா..? பேரவை வளாகத்தில் இபிஎஸ் நச் பதில்..!!
சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் 17 வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில் ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்தினார். கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வந்தது பேசு பொருளாக மாறிய நிலையில் தற்போது ஆளுநர் உரையை வாசித்து முடித்தார். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்துடன் நிறைவடைந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆளுநர் உரையில் எதிர்பார்த்த திட்டங்களோ அறிவிப்புகளோ இல்லை என்று தெரிவித்தார். த
மிழக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையே ஆளுநர் உரையாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார். போதைப் பொருள் நடமாட்டம் முன்பை விட அதிகமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 38 நாட்களில் 150 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், பாலியல் குற்றங்கள் மட்டும் 126 என்றும் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, சிங்கப்பின் சிறப்பு படைக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்தான் உள்ளது என்று கூறியுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார். விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை தமிழக வெற்றிக்கழக அரசு நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகா அரசிடம் இருந்து தண்ணீரை கேட்டு பெற இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். எடப்பாண்டில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை என்பதையும் எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்டி உள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்! உதயநிதி! எடப்பாடி பழனிசாமி! சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் யார்? யார்?
தனது மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்தார். மிதுன் அரசியலுக்கு வருவதாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என்று குறிப்பிட்டுள்ளார். தனது மகன் மீதும் அரசியலுக்கு வருவதாக அவதூறு செய்திகளை பரப்பாதீர்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கரையும் அதிமுக! கவலைப்படும் மு.க.ஸ்டாலின்! பழனிசாமி அக்கறை காட்டவில்லை என நிர்வாகிகள் அதிருப்தி!