×
 

அப்படிலாம் இல்ல... பிரதமருக்கு தமிழ் மீது நிறைய பற்று... வரிந்து கட்டிய EPS..!!

பிரதமர் மோடிக்கு தமிழ் மீது அதிக பற்று இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு நீட்சியாக நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க. என்று குற்றம்சாட்டி உள்ளார். இந்த நிலையில், புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு "கர்த்தவ்ய துவார்" என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில், இந்த வாயிலின் பெயரில் உள்ள தமிழ்க் குறிப்பு உரிய மொழிபெயர்ப்பு இல்லாமல், இந்திக்கான சொல்லாகவே பொறிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதற்கான எதிர்க்குரல்களுக்கு மதிப்பு அளித்து, தற்போது இந்திப் பெயரை அகற்றிட ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருவதாக கூறினார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள் என்று தெரிவித்தார். உலக நாடுகளுக்கு செல்லும் போது கூட உலகின் தொன்மைமிகு மொழியாம் நம் தமிழின் சிறப்புகளை பெருமிதத்தோடு குறிப்பிடும் பிரதமர் மோடி, சமீபத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் "திருவள்ளுவர் இருக்கை" அமைக்க மலேசிய அரசோடு ஒப்பந்தம் கையெழுதிட்டதும் நினைவுகூரத்தக்கது என்றார்.

இதையும் படிங்க: ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்? EPS தலைமையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..! முக்கிய ஆலோசனை..!!

இப்படி தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும் என்றும் எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேற்கூறிய நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்டிட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: நாங்க STRONG... திமுக கூட்டணியில் தான் குழப்பம்... EPS தடாலடி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share