டம்மி அப்பாவும், மகனும் சொல்லுவது எல்லாமே பொய்.! விளைவை பார்த்தீர்களா! இபிஎஸ் ஆவேசம்..!
நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவர் கவுதமிற்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவர் கௌதம், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் உயிரிழந்த மாணவர் கௌதமிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்ததுடன் ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 24-வது மாணவர் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது முதலமைச்சர் ஸ்டாலின் உணர்வாரா? என்ன கேள்வி எழுப்பியுள்ள அவர், திமுக ஆட்சி வந்தால் நீட் ஒழிந்துவிடும் என இந்த டம்மி அப்பாவும், அவர் மகனும் கூறிய அத்தனையும் பொய் என்றும் ஊழல் செய்யவும், கொள்ளையடித்த பணத்தைக் காப்பாற்றவும், ED ரெய்டுக்கு பயந்து தம்பியை தப்பிக்க வைக்கவுமே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார். இவர்களா நீட் ரத்து செய்யப்போகிறார்கள்? அத்தனையும் நாடகம்! திமுகவின் நாடகத்திற்கு நீங்கள் பலியாக வேண்டாம் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: நெல்லை பக்கம் பார்வையைத் திருப்பிய இபிஎஸ்.. அதிதீவிர பயத்தில் அதிமுக ர.ர.க்கள்...!
ஒரு முறை, ஒரே ஒரு முறை, உங்கள் பெற்றோர்களைப் பற்றி சிந்தித்து பாருங்கள்., அவர்களுக்கு நீங்கள் தான் உலகமே., அவர்களை விட்டுச் செல்ல ஒருபோதும் நினைக்காதீர்கள் என்று அறிவுறுத்தியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, இந்த உலகில் எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன., உங்களுக்காக பல்வேறு கதவுகள் திறந்து உள்ளன., அவைகளை கண்டறிந்து முன்னேறுங்கள்., NEVER EVER GIVE UP என்று தெரிவித்துள்ளார்.
வெட்டியாக எடுக்கும் உங்கள் போட்டோஷூட்டை நீட் மாணவர்களுக்காக ஒருமுறை எடுத்து, அவர்களிடம் நீங்கள் சொன்ன பொய்க்காக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள் என முதலமைச்சர் ஸ்டாலினை எடப்பாடி பழனிச்சாமி சாடியுள்ளார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் ரெய்டில் கமுக்கமாக இருக்கும் ஸ்டாலின் அதிமுகவை பழிவாங்குவதா? இபிஎஸ் காட்டம்..!