இங்கயே பாதுகாப்பு இல்ல.. வேற எங்க இருக்கப்போகுது..? ஆளும் அரசை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்..!
அரசு விடுதியில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாம்பரத்தில் செயல்பட்டு வரும் அரசு விடுதியில் உள்ள எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் காவலர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து காவலர் மேத்யூ என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்றும் அரசு சேவை இல்லத்திலேயே பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது எனவும் தெரிவித்தார்.
இதற்கு பொம்மை முதல்வர் ஸ்டாலின் வெட்கி தலைகுனிய வேண்டும் என கூறிய எடப்பாடி பழனிச்சாமி, குற்றம் செய்பவர்களுக்கு இந்த ஆட்சி எடுக்கும் நடவடிக்கைகள் மீது துளி கூட பயம் இல்லை என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையிலேயே உள்ளது என தெரிவித்தார். இந்த காவலாளியால் மற்ற சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனரா? என்பதை காவல்துறையினர் தீர விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், தமிழ்நாடு டெல்லிக்கு Out Of Control-ஆக இருப்பதாக யாரோ எழுதிக் கொடுத்த டயலாக்கைப் பேசும் பொம்மை முதல்வர் அவர்களே, உங்கள் ஆட்சியில் Out Of Control ஆக இருக்கும் பாலியல் "SIR"-களை எப்போது Control செய்யப் போகிறீர்கள் என்ன விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: எந்தெந்த திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கலாம்? முதல்வர் தலைமையில் துறைசார் ஆய்வுக்கூட்டம்..!
காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அமித்ஷா தகுதியற்றவர்..! அருவருப்பு.. அப்பட்ட பொய்.. திமுக ராஜா கடும் தாக்கு..!