செங்குத்தாக பிளவுபட்ட அதிமுக..! பரம எதிரி திமுகவுடன் சேர "வற்புறுத்திய EPS"..! எகிறும் குற்றச்சாட்டுகள்..!
சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு அதிமுக செங்குத்தாக பிளவுபட்டு உள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுக செங்குத்தாக பிளவுபட்டு இருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுடன் எடப்பாடி பழனிச்சாமி கை கோர்க்க நினைத்தார் என்ற கடும் குற்றச்சாட்டை அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி அதிமுக இருக்காது என C.V. சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
திமுகவுடன் இணைந்த ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி முயன்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பரம எதிரியான திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி வற்புறுத்திய போது அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் மட்டும் இல்லாமல் பல்வேறு தேர்தலில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் தலைமையிலான விஜய் அரசுக்கு ஆதரவு கொடுக்க அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் இன்று பிற்பகல் 2 மணிக்கு விஜயை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வெல்வாரா? வீழ்வாரா? ... பிறந்தநாளில் எடப்பாடி பழனிசாமிக்கு பேரிடி... அதிமுகவினருக்கு இன்று காத்திருக்கும் ஷாக்கிங் நியூஸ்...!
இதற்கிடையில் அதிமுகவின் உடைக்க வேண்டும் என்ற நோக்கமே எங்களுக்கு இல்லை என தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது என்றும் எஸ் பி வேலுமணி தெரிவித்தார் அதிமுக உடையதற்கு நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்து இருக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணி தோல்வி அடைந்திருப்பதாகவும் அதை ஏற்றுக் கொள்கிறோம் எனவும் சி.வி. சண்முகம் தெரிவித்திருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக செங்குத்தாக பிளவு பட்டிருப்பது தொண்டர்களை மிகுந்த கவலைக்கு ஆளாக்கியிருக்கிறது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் நிலைக்குத் தள்ளப்படும் இபிஎஸ்... ஒரே ஒரு தவறால் சறுக்கிய எடப்பாடி... வெளியே வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்...!