ஜன.4,5 ஆம் தேதிகளில் அதிமுக பொதுக்கூட்டம்... "EPS" பங்கேற்பு... முக்கிய அறிவிப்பு...!
ஜனவரி 4 மற்றும் ஐந்தாம் தேதிகளில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலை பாஜக கூட்டணியுடன் சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். கட்சியின் அமைப்புகளை வலுப்படுத்தும் விதமாக ஆலோசனைக் கூட்டங்கள் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார்.
இதையடுத்து, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். கோயம்புத்தூரில் ஜூலை 7ஆம் தேதி தொடங்கிய சுற்றுப்பயணத்தை தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து உரை நிகழ்த்துவது உடன் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிறார்.
அப்போது, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் உறுதியளித்து வருகிறார்.தமிழ்நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக தேர்தல் சுற்றுப்பயணத்தை முடித்த எடப்பாடி பழனிச்சாமி, கட்சிப் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார். இந்த நிலையில், ஜனவரி மாதம் 4 மற்றும் ஐந்தாம் தேதிகளில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் ஜனவரி 4ஆம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெட்கக்கேடு!! சிறார்கள் கையில் பட்டாக்கத்தி!! திமுக அரசு மீது எடப்பாடி கடும் கோவம்!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற உரையாற்ற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜனவரி 5ஆம் தேதி மாவட்ட மகளிர் அணி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திலும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு கூட்டங்களிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று உரையாற்றுகிறார்.
இதையும் படிங்க: திமுகவை வீழ்த்த அதிமுகவுக்கு வாருங்கள்!! ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு முன்னாள் அமைச்சர் அழைப்பு!