×
 

விட்டு விலகிச் செல்பவர்கள் போகட்டும்! ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி ஆவேசம்! தொண்டர்களுக்கு ஆறுதல்!

அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் கட்சி தாவல்கள் மற்றும் புதிய அரசியல் மாற்றங்களின் மத்தியில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். குறிப்பாக, மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலை இலக்காக வைத்து முழு வீச்சில் பணியாற்ற வேண்டும் என்றும், கட்சியை விட்டு வெளியேறுபவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்படுவது மாநில அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

அதன்பின்னர், அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் த.வெ.க.வில் இணைந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் த.வெ.க.வில் இணைந்ததாக கூறப்படும் நிகழ்வு, அ.தி.மு.க.வுக்கு அரசியல் ரீதியாக பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல்!! உயிருக்கு அச்சுறுத்தல்! ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்க கோர்ட் உத்தரவு!

இந்த சூழலில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் அடுத்தகட்ட செயல்திட்டங்கள், களநிலவரம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது மிக முக்கிய இலக்கு என்று வலியுறுத்தினார். மேலும், கட்சிக்காக தொடர்ந்து உழைக்கும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் உரிய வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

கட்சியில் இருந்து விலகிச் செல்பவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், உண்மையான பலம் தொண்டர்கள்தான் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் கட்சிக்கு உறுதுணையாக இருப்பதால், அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா பக்கமும் இடி! கரையும் கட்சி! அதிமுகவில் தொடரும் சோகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share