×
 

அதிமுக-தான் கூட்டணியின் தலைமை! நானே முதல்வர் வேட்பாளர்! எடப்பாடியார் அதிரடி பிரசாரம்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக-தான் பெரிய கட்சி தமிழகத்தில் அதிமுக-தான் கூட்டணியின் தலைமை என்பதை  எடப்பாடி பழனிசாமி உறுதிப்படுத்தினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தேர்தல் கருத்துகளையும் கடுமையாகச் சாடினார்.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், இபிஎஸ் அவர்களின் இன்றைய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி செய்த 31 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட தொலைநோக்குத் திட்டங்களால்தான், இன்று தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் திமுக எதையும் செய்யாமல் தமிழகத்தைப் பின்னோக்கித் தள்ளிவிட்டது என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை! ஸ்டாலினுக்கு எடப்பாடியார் கொடுத்த அதிரடி பதிலடி!

நடைபெறுவது சட்டமன்றத் தேர்தல் என்பது கூடத் தெரியாமல், டெல்லிக்கும் தமிழகத்திற்கும் தான் போட்டி என்று முதல்வர் கூறுகிறார். இது சட்டமன்றத் தேர்தல்; இங்கு மோதல் என்பது அதிமுக-விற்கும் திமுக-விற்கும் தான், என்று அவர் எள்ளி நகையாடினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக-தான் பெரிய கட்சி; எனவே தமிழகத்தில் அதிமுக-தான் கூட்டணியின் தலைமை என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

கூட்டணி வெற்றி பெற்றால் அதிமுக-தான் ஆட்சியமைக்கும். இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை; அதிமுக வெற்றி பெற்றதும் நானே (இபிஎஸ்) முதலமைச்சராகப் பொறுப்பேற்பேன். இதனை நான் மட்டும் சொல்லவில்லை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே 'தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும், இபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர்' என்று தெளிவாகக் கூறிவிட்டார், என்று அதிரடியாக முழங்கினார்.

அதிமுக இத்தேர்தலில் 169 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளான பாஜக-வுக்கு 27, பாமக-வுக்கு 18, அமமுக-வுக்கு 11 எனத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் சக்தியாக உருவெடுக்கும் என்று தொண்டர்களிடையே இபிஎஸ் நம்பிக்கையூட்டினார்.

இதையும் படிங்க: மயிலாப்பூரில் போட்டி? எடப்பாடியார் பிரசாரத்தில் பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share