மக்களுக்கு உயிர் பயத்தை காட்டுவது தான் சாதனையா? சொல்லுங்க முதல்வரே...! EPS கண்டனம்..!
மளிகைப் பொருட்கள் டெலிவரி ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவல்துறையை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்துவிட்டு, அரிவாள்களுக்கும், துப்பாக்கி கலாச்சாரதிற்கும் , போதைப் பொருட்களுக்கும் தமிழக மக்களை இரையாக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை திமுக அரசு சீர்குலைத்து உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் நேற்று , மளிகைப் பொருள் டெலிவரி செய்யும் நபரான பார்த்திபன் என்பவர் மீது, இருவர் நடுரோட்டில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளி நெஞ்சை பதைக்க வைக்கிறது என்றும் தெரிவித்தார்.
இன்னும் எத்தனை முறை, இதுபோன்ற கொடூரமான காட்சிகளை தமிழக மக்கள் காண வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார். தாக்கிய இளைஞர்கள் கஞ்சா போதையில் இந்த தாக்குதலை நடத்தியதாக செய்திகள் வருவதாக எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார். நான்கரை ஆண்டுகளாக நான் எதைத் தொடர்ந்து எச்சரித்து வந்தேனோ, அது இப்போது சர்வசாதாரணமாகி இருக்கிறது என்று கூறினார். இப்படி மக்களுக்கு உயிர் பயத்தைக் காட்டுவதை தன் சாதனையாக கருதுகிறாரா இன்றைய பொம்மை முதலமைச்சர் என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: EPS சார்... இது உங்களுக்கு செட் ஆகல..! வெயிட் பண்ணி XEROX எடுத்துக்கோங்க... அதிமுக தேர்தல் அறிக்கையை விமர்சித்த டிஆர்பி ராஜா..!
காவல்துறையை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்துவிட்டு, அரிவாள்களுக்கும், துப்பாக்கி கலாச்சாரதிற்கும் , போதைப் பொருட்களுக்கும் தமிழக மக்களை இரையாக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார். பார்த்திபனை தாக்கியோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: இனி மகளிர் தொகை ரூ.2000..! 5 முக்கிய தேர்தல் வாக்குறுதி கொடுத்த EPS..!