×
 

ஆதிக்கத்தை சுட்டெரித்த பேரொளி... என்றும் பெரியார் சமூக நீதிப் பாதையில்...! EPS புகழ் மகுடம்...!

தந்தை பெரியாரின் நினைவு தினத்தை ஒட்டி எடப்பாடி பழனிச்சாமி புகழாரம் சூட்டினார்.

தந்தை பெரியார் என்று அன்போடு அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 1973-ஆம் ஆண்டு இதே நாளில், 94 வயதில் காலமான பெரியார், சமூக சீர்திருத்தத்தின் மாபெரும் சின்னமாகவும், பகுத்தறிவுவாதியாகவும், சுயமரியாதை இயக்கத்தின் தோற்றுவிப்பாளராகவும் திகழ்ந்தவர்.

1924 இல் கேரளாவின் வைக்கத்தில் தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுக்கு நடந்த போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார். இதனால் "வைக்கம் வீரர்" என்ற பட்டம் பெற்றார். 1925 இல் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். இது சாதி ஒழிப்பு, பெண் உரிமை, பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு ஆகியவற்றை மையப்படுத்தியது. சுயமரியாதைத் திருமணங்கள், பெண்களுக்கு சொத்துரிமை, கல்வி சமத்துவம் போன்றவற்றை வலியுறுத்தினார்.1939 இல் நீதிக்கட்சியின் தலைவரானார்.

1944 இல் அதை திராவிடர் கழகமாக மாற்றினார். திராவிட இனம், ஆரிய ஆதிக்க எதிர்ப்பு, தனி திராவிட நாடு கோரிக்கை ஆகியவை அவரது அரசியலின் முக்கிய அம்சங்கள். இந்தி திணிப்புக்கு எதிராக கடும் போராட்டம் நடத்தினார். ஆதிக்கத்தின் அனைத்து வடிவங்களையும் சுட்டெரித்த பேரொளி என்று தந்தை பெரியாருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம் சூட்டினார்.

இதையும் படிங்க: EPS - பியூஷ் கோயல் சந்திப்பு நிறைவு... பேச்சுவார்த்தையில் சுமூகம்.. - நயினார்...!

தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி என்று தெரிவித்தார்.  திராவிட இயக்கத்தின் அறிவொளி தந்தைப் பெரியார் அவர்களின் நினைவு நாளான இன்று எனவும் தெரிவித்துள்ளார். மனிதம் போற்றும் உன்னதக் கோட்பாடாம் திராவிடத்தின் உயரிய விழுமியங்களோடு, சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதியேற்போம் என்றும் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: உங்க அரசியல் வாழ்க்கைக்கு நீங்களே முடிவுரை எழுதுறிங்க EPS… எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share