×
 

களைக்கட்ட போகுது. ! ஈரோட்டில் விஜய்... தவெக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...!

ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நடத்தும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக வெற்றி கழகம் வெளியிட்டுள்ளது.

வரும் 18ஆம் தேதி வியாழக்கிழமை என்று ஈரோடு மாவட்டம் மூங்கில் பாளையத்தில் காலை 11 மணியளவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நடத்த இருப்பதாக தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது. காவல்துறையின் முழுமையான வழிகாட்டு நெறிமுறைகள் படி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு BOX-களிலும், காவல் துறையின் அறிவுறுத்தலின்படி, பங்கேற்பாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள். கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அனுமதி இல்லை என்றும் வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும், அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது, போக்குவரத்திற்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும் என கூறி உள்ளது.

மேலும், காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என்றும் போக்குவரத்து விதிகளை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும்., பட்டாசு வெடிப்பது உள்ளிட்ட அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்குக் காவல் துறை அனுமதித்துள்ள இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்., வேறு இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாகவோ கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது., மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில், மேலும் அங்கே செல்லும் வழிகளில் மற்றும் திரும்பி வரும் வழிகளில் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஈரோடு வரும் விஜய்..!! ஒரே ஒரு ஸ்கூலுக்கு மட்டும் லீவு..!! காரணம் இதுதான்..!!

 எளிதில் அடையாளம் காணும் வகையில், தன்னார்வலர்கள் சீருடை அணிந்து தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும் பிற சாலைகளிலும் நெடுஞ்சாலை, இதர சாலைகளின் இரு புறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள். காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், வாகனங்கள் கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது., மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி மாணாக்கர்களுக்கும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: நிபந்தனைகளை மீறினால்... பெரியார் மண்ணில் இருந்து விஜய்க்கு பறந்த எச்சரிக்கை... கட்டுப்பாடுகளை தாக்குப்பிடிக்குமா தவெக?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share