×
 

கிறிஸ்தவர்களிடையே சாதிய பாகுபாடு... புள்ளி விவரத்துடன் சி.எம். விஜய்க்கு பறந்த முக்கிய கோரிக்கை...!

மத மற்றும் ஜாதி வேறுபாடுகளை களைய வேண்டிய அரசு அதிகாரிகளே ஜாதி மோதலை தூண்டுகிறது என குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களிடையே சாதிய பாகுபாடுகளை களைய முதலமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுரையில் எவிடன்ஸ் அமைப்பின்  இயக்குனர் கதிர் 

மத மற்றும் ஜாதி வேறுபாடுகளை களைய வேண்டிய அரசு அதிகாரிகளே ஜாதி மோதலை தூண்டுகிறது என குற்றச்சாட்டு

மதுரையில் எவிடெண்ட்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர் அளித்த பேட்டியில் "ஜீலை 17 ஆம் தேதி திருச்சி அருகே உடல்நல குறைவால் உயிரிழந்த முன்னாள் ஆசிரியர் ராஜு உடலை பொது கல்லறையில் புதைக்க தலித் அல்லாத கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்,

இதையும் படிங்க: ராகுல் காந்தி கைது ஜனநாயக விரோதம்..! மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு... முதல்வர் விஜய் அதிரடி..!!

 இதனால், முசிறி சார் ஆட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி 3 நாட்களுக்கு பின்னர் ராஜுவின் உடல் பொது கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

 முசிறி அருகே உள்ள கோட்டப்பாளையத்தில் கிறிஸ்தவர்களுக்கிடையே சாதிய பாகுபாடு உள்ளது,உயர்ஜாதி அமைப்பின் இருக்கு ஒரு தேவாலயம் கல்லறையும் அதேபோல் தலித் அமைப்பினருக்கு ஒரு தேவாலயம் ஒரு கல்லறை என உள்ளது .

 உயர் ஜாதியினருக்கு ஒதுக்கப்பட்ட கல்லறை 2 ஏக்கர் 92 சென்ட் அமைப்பில் உள்ளது . தலித் கிறிஸ்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லறை என்பது 10 செண்ட் அளவிளானது, இதில் 300 உடல்களுக்கு மேல் புதைக்கப்பட்டுள்ளது. 

தற்போது தலித் கிறிஸ்தவரின் கல்லறைகளில் புதைக்க முடியாத சூழல் உள்ளதால் தலித் கிறிஸ்தவர்களின் உடல்களை பொது கல்லறையில் புதைக்க அனுமதிக்க வேண்டும் என தற்போது இறந்த ராஜு உட்பட 5 பேர் துறையூர் நீதிமன்றத்தில் 2014 ஆம் ஆண்டில் வழக்கு தொடுத்தனர். 

2024 ல் நீதிமன்றம் தலித் கிறிஸ்தவர்களின் உடலை பொது கல்லறையில் புதைக்க யாரும் இடையூறு தடையோ செய்யக்கூடாது என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இறந்த ராஜு உடலை பொது கல்லறையில் அடக்கம் செய்ய குடும்பத்தினர் நடவடிக்கைகள் மேற்கொண்ட போது தலித் அல்லாத கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனுடைய அப்பகுதியில் போராட்டங்கள் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து சார் ஆட்சியர் நடத்திய அமைதி பேச்சு வார்த்தைக்கு பின்னர் ராஜுவின் உடல் 20 ஆம் தேதி அதிகாலை பொதுக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

 தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்கள் மற்றும் கல்லறைகளில் பாகுபாடுகள் காட்டக்கூடாது. தலித் கிறிஸ்தவர்கள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் வருவதில்லை எனவும், அவர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று 1950 ல் குடியரசுத் தலைவர் ஆணை உள்ளது.

 ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். கத்தோலிக்கர் என்றால் பொதுவானவர் என அர்த்தம் ஆனால் இவர்களுக்குள் சாதிய பாகுபாடுகள் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

 இந்த விவகாரத்தில் திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் சாதிய தீண்டாமைகளை ஊக்குவிப்பது போல அமைந்துள்ளது. தலித் அல்லாத கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் கிறிஸ்தவர்கள் BC வகுப்புக்குள் வருவதால் இவர்கள் மீது எஸ்சி எஸ்டி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

 கோட்டப்பாளையம் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் இது போன்ற சாதிய பாகுபாடுகள் நிலவி வருகிறது, ஆகவே தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இவ்வகாரத்தில் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்"
பொதுமக்கள் இடையே அமைதியும் ஒற்றுமையும் ஏற்பட வேண்டிய அரசு அலுவலர்கள் ஜாதியை மோதலை தூண்டும் வகையில் செயல்படுகின்றனர் என குற்றம் சாட்டினார்

இதையும் படிங்க: விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு கிடைக்குமா ஜாமீன்? - தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று விசாரணை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share