×
 

"NO CASH"...! 100% FAST TAG..! புதிய விதிகள் இன்று முதல் அமல்..!!

100% ஃபாஸ்ட் டேக் என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் 100% FASTag அமல் என்ற புதிய மாற்றம் இன்று முதல் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தபடி, சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணம் செலுத்தும் முறை முற்றிலும் நிறுத்தப்பட்டு, 100 சதவீதம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

இந்த மாற்றம் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், சுங்கக் கட்டண வசூலை வெளிப்படையாக்குவதற்கும், தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது. FASTag என்பது வாகனங்களின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் ஒரு சிறிய RFID சாதனம் ஆகும். இது வாகனம் சுங்கச்சாவடியை அடைந்தவுடன் தானாகவே கட்டணத்தை கழித்துக்கொள்ளும் வகையில் செயல்படுகிறது.

2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறை, படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, 2021இல் நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டது. இப்போது 2026இல் 100% டிஜிட்டல் அமலாக்கத்துடன் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த புதிய விதியின்படி, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வேக்களில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ரொக்கப் பணம் ஏற்றுக்கொள்ளப்படாது. வாகன ஓட்டிகள் FASTag மூலம் அல்லது UPI போன்ற டிஜிட்டல் முறைகளின் வாயிலாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க: நாட்டையே அதிரவைத்த மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: கைதான மனைவிக்குத் திடீர் ஜாமீன்!

FASTag இல்லாத வாகனங்கள் UPI மூலம் செலுத்தலாம், ஆனால் அவர்களுக்கு சாதாரண கட்டணத்தின் 1.25 மடங்கு செலுத்த வேண்டியிருக்கும். இது டிஜிட்டல் முறையை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம் போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைப்பதாகும். இதற்கிடையில், திருப்பாச்சேத்தி, சத்திரக்குடி ஆகிய இரு சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகள் - ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. Fastag இல்லாத சில அரசுப் பேருந்துகளும் காத்திருக்கின்றன. 

இதையும் படிங்க: பெருமைக்குரிய மைல்கல்..!! இந்தியாவின் ராணுவ பலம்: உலக அளவில் 5-வது இடம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share