தீக்குச்சி குடோன் தீ விபத்தில் தீராத சோகம்... கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை... !
கோவில்பட்டி அருகே தீக்குச்சி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீக்குச்சி குடோன் தீ விபத்தில் சிக்கி தீக்காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுடலைமுத்து கணேசன் ஆகிய இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. பலி எண்ணிக்கை மூன்றாக உயர்வு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் பசுந்தனை சாலைப் பகுதியில் செயல்பட்டு வந்த முருகன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலையின் தீக்குச்சி குடோனில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி விஜயாபுரியை சேர்ந்த கார்த்திக் (27) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகாசி பேரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுடலைமுத்து (42), துரைச்சாமி புரத்தைச் சேர்ந்த கணேசன்(47) இருவரும் தீக்காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதையும் படிங்க: #BREAKING அதிகாலையிலேயே பயங்கரம்... தனியார் ஆம்னி பேருந்து பயணிகளுடன் தீப்பிடித்து எரிந்த பகீர் சம்பவம்... 43 பேரின் நிலை என்ன?
இந்த நிலையில் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பலியானவர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இந்த தீ விபத்து குறித்து ஆலையின் உரிமையாளர் முருகன் மீது நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து...100 அடி தூரத்திற்கு சிதறிய உடல்கள்... 20 தொழிலாளர்கள் உடல் கருகி பலி...!