மீனவர்களின் ரயில் மறியல் போராட்டம்! முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிப்பு... தீவிர கண்காணிப்பு..!
ராமேஸ்வரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர்கள் அறிவித்துள்ள நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தொடர்ந்து மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர்கள் அறிவித்தனர். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான கடல் எல்லை, சர்வதேச கடல் எல்லைக் கோடு மூலம் வரையறுக்கப் பட்டுள்ளது. இந்த எல்லை பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில் வெறும் 12 கடல் மைல்கள் தொலைவில் உள்ளது.
இந்தப் பகுதி மீன்வளம் மிக்கது என்பதால், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், குறிப்பாக ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி போன்ற கடலோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். ஆனால், கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்கிறது, அவர்களின் படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்கிறது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒரு சிக்கலான பிரச்சினையாக உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையேயான கடல் எல்லையான பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது வழக்கமாகி உள்ளது.
இதையும் படிங்க: தொடரும் மீனவர்கள் கைது.. எப்பதான் தீர்வு வரும்? வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!
தமிழக மீனவர்கள் கைது செய்ய ப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில் இருநாட்டினரும் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
இலங்கை கடற்படை நடவடிக்கையை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்தனர். எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து வரும் இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர். 13ஆம் தேதி ஆர்ப்பாட்டமும் 19ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கம் அறிவித்தது. அதன்படி இன்று ரயில் மறியல் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட இருப்பதால் போலீசார் கொடுக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக தீவிர கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இலங்கை கடற்படை அட்டூழியம்! 14 தமிழக மீனவர்கள் கைது.. படகுகள் பறிமுதல்..!