×
 

சர்ச்சை அதிகாரி சதீஷ் பணியிட மாற்றம்..! கலைஞரின் உறவினருக்கே டிரான்ஸ்பர்..!

தர்பூசணி பழ விவகாரம் தமிழகம் முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

 சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக இருப்பவர் சதீஷ்குமார்.  தொடர்ந்து கடந்த காலங்களில் உணவு பாதுகாப்பு துறையின் கீழே பல்வேறு அதிரடி ரெய்டுகளை நடத்தி சென்னை மண்டலத்தில பல்வேறு பகுதிகளில் கெட்டுப்போன உணவுகளை பரிமுதல் செய்வது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். குறிப்பாக கெட்டுப்போன ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்றவை பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ரயில்களில்  கொண்டு வரப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு அதிரடி ரெய்டுகளை, டன் கணக்கில் இறைச்சிகளை பறிமுதல் செய்துள்ளார்.  

 அதேபோல தொடர்ச்சியாக உணவு கலப்படங்களை தவிர்க்கக்கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தார். ஆனால் சமீபத்தில்  தர்பூசணி பழங்களில் செயற்கை முறையில் ரசாயனம் கலப்பு செய்யப்படுவதாக கூறி எழுந்த புகாரின் அடிப்படையில்,  வள்ளுவர் கோட்டத்தில் ஆய்விற்கு சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் தர்பூசணி பழங்களில் பெரும்பாலானவை தற்போது கலப்படத்துடன் காணப்படுவதாகவும்,  இந்த கோடை காலத்தில் தர்பூசணி பழங்களை வாங்கிச் சாப்பிடும் போது கவனமுடன் இருக்கும் படியும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். 

இதையும் படிங்க: நட்பை நாடும் டிரம்ப்... இந்தியாவுக்கு வரி விலக்கு… அமெரிக்கா வழங்கும் சூப்பர் சான்ஸ்..!

அதுமட்டுமில்லாமல் விவசாயிகள் வியாபாரிகள் என பாரபட்சம் இன்றி தர்பூசணி பழங்களில் கலப்படம் செய்வதாகவும் குற்றச்சாட்டினார். இதன் தொடர்ச்சியாக கோடை காலத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதுமே நடந்து வந்த தர்பூசணி வியாபாரம் வெகுவாக சரிந்தது. இதனையடுத்து தர்பூசணி வியாபாரிகள், விவசாயிகள் தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்து வந்தனர். 

தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களிலும் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். இந்த சூழ்நிலையில் தான் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் பணியிடை மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக பொது சுகாதாரத்ததுறையின் சார்பில் தகவல் என்பது வெளியிடப்பட்டிருக்கிறது.  உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக இருந்த சதீஷ்குமார், தமிழ்நாடு மருந்து நிர்வாக துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

ஆனால் அந்த அறிவிப்பில், சென்னை மாவட்டத்திற்கான புதிய அதிகாரி யார்  என்பது தொடர்பான எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. மாற்றாக, திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக இருக்கும் போஸ் கூடுதலாக சென்னை மாவட்ட பொறுப்புகளை கவனிப்பார் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. 

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியாக இருந்த சதீஷ்குமார் கலைஞர் கருணாநிதியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கருணாநிதியின் அக்காள் மகன் அமிர்தத்தின் மகளைத் தான் சதீஷ்குமார் திருமணம் செய்துள்ளார். 

இதையும் படிங்க: ஊட்டி, கோத்தகிரி போறவங்களுக்கு இனி கவலையில்ல... அமைச்சர் சொன்ன குட் நியூஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share