×
 

ஐஸ்கிரீமில் மதுபான ஃப்ளேவர்..!! எழுந்த பரபரப்பு புகார்..!! திருமங்கலம் கடைக்கு அதிகாரிகள் அதிரடி சீல்..!!

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேகமாகப் பரவியதால் பொதுமக்களிடையே கடும் கண்டனம் எழுந்தது.

சென்னை திருமங்கலம் பகுதியில் இயங்கி வந்த ஒரு ஐஸ்கிரீம் கடையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பும் பல்வேறு சுவையான ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அங்கு மதுபானங்களின் சுவையில் ஐஸ்கிரீம்கள் இருப்பதாக இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கடையை சீல் வைத்தனர்.

இந்தக் கடையில் பிளாக் கரெண்ட், ப்ளூ பெர்ரி, டார்க் சாக்லேட், மாங்காய், லிச்சி உள்ளிட்ட பல பிரபலமான ஃபிளேவர்களுடன் கூடிய ஐஸ்கிரீம்கள் கிடைத்தன. ஆனால், ரெட் வைன், வோட்கா, விஸ்கி மற்றும் ரம் ஆகிய மதுபானங்களின் பெயரில் ஐஸ்கிரீம்கள் விற்கப்படுவதாக ஒரு பெண் இன்ஸ்டாகிராமில் வீடியோ ரிவ்யூ பதிவிட்டிருந்தார். குழந்தைகள் அதிகம் விரும்பும் இனிப்பு வகையான ஐஸ்கிரீம்களில் மதுபான சுவை இருப்பது பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேகமாகப் பரவியதால் பொதுமக்களிடையே கடும் கண்டனம் எழுந்தது.

புகாரின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது மதுபான சுவை கொண்ட ஐஸ்கிரீம் மாதிரிகளைப் பறிமுதல் செய்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த மாதிரிகளில் உண்மையான மதுபானம் சேர்க்கப்பட்டுள்ளதா அல்லது வெறும் ஃபிளேவர் எசன்ஸ் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது விரைவில் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: திமுகவின் நாடாளுமன்ற இருக்கை மாற்றம்..!! பின்னணி என்ன தெரியுமா..??

மேலும், கடை உரிமையாளர் பிரித்திவிராஜ் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தி ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவதற்காக போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் கடையை உடனடியாக சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் சென்னையில் உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் அதிகம் நாடும் இனிப்பு உணவுகளில் தரக்குறைவான அல்லது தவறான பொருட்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: ரஷ்யா மீது வன்மத்தை கக்கும் உக்ரைன்.. தொடர் டிரோன் தாக்குதல்.. 7 பேர் பரிதாப பலி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share