×
 

விடிந்ததும் வந்த அதிர்ச்சி... ரெய்டு நெருக்கடியில் சுருண்டு விழுந்த அதிமுக எம்.எல்.ஏ...!

லஞ்ச் ஒழிப்பு போலீசார் சோதனையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மயக்கம்.

லஞ்ச ஒழிப்பு துறை சோதனைக்கு மத்தியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் மயங்கி விழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் அதிமுக எம்எல்ஏவாக இருந்த இவர் அப்பொழுது பார்த்தோம் அப்படின்னா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்சவழிப்பு போலீசார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அது தொடர்பாக இன்று காலை 6:30 மணி முதல் அவரது பண்ருட்டியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

சோதனையின் இடையே சத்யா பழனிசெல்வம் திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். உடனடியாக அவரை அவரது உறவினர்கள் தற்போது கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு எக்கோ உள்ளிட்ட தீவிர சோதனைகள் வந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அவர் சற்றே உடல் நிலை தேறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: Non veg Milk தெரியுமா? அசைவ பாலுக்கு அசைந்து கொடுக்காத இந்தியா!! அமெரிக்க ஒப்பந்தம் இழிபறி!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் 2016-21 சட்டமன்ற உறுப்பினராக சத்யா பன்னீர்செல்வம் இருந்து வந்தார். இவர் தற்போது அதிமுகவின் மாநில மகளிர் அணி துணை செயலாளராக செயல்பட்டு வருகிறார் கடந்த தேர்தலில் இவருக்கு அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் தற்போது இவர் பண்ருட்டியில் முன்னாள் நகர மன்ற தலைவரான இவரது கணவர் பன்னீர் செல்வத்துடன் வசித்து வருகிறார்.

முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சத்யா பன்னீர்செல்வம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் சத்யா பன்னீர்செல்வம் பண்ருட்டி வீட்டில் தற்போது கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் 2011-2016 வரை பண்ருட்டி நகர மன்ற தலைவராக இருந்த போது ஊழல் புரிந்ததாக கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். தற்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் மீது புதிய வழக்கு பதிந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 

இதையும் படிங்க: போராட்டக் களத்தில் வளைகாப்பு! துயரத்திலும் பூத்த மனித நேயம்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share