×
 

விறகு அடுப்பு தான் இனி! தலைமைச்செயலரே சொல்லிட்டாருங்க! தமிழ்நாடு கேட்டரிங் உரிமையாளர்கள் தகவல்!

''சுப முகூர்த்த நிகழ்ச்சிகளுக்கு, சமையல் செய்வதற்கு, விறகு அடுப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று, தலைமைசெயலர் முருகானந்தம் ஆலோசனை வழங்கினார்,'' என தமிழ்நாடு கேட்டரிங் உரிமையாளர்கள் நல செயலர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருமணம், சுப முகூர்த்த நிகழ்ச்சிகளில் சமையல் பெரும் சிக்கலாக மாறியுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக விறகு அடுப்பு அல்லது கரி அடுப்பை பயன்படுத்துமாறு தலைமைச் செயலர் முருகானந்தம் ஆலோசனை வழங்கியுள்ளார் என்று தமிழ்நாடு கேட்டரிங் உரிமையாளர்கள் நல சங்க செயலர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நேற்று தலைமைச் செயலகத்தில் உணவகங்கள், கேட்டரிங் நிறுவனங்கள் மற்றும் கேஸ் விநியோக நிறுவன பிரதிநிதிகளுடன் நடந்த அவசர கூட்டத்தில் இந்த பிரச்னை விவாதிக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு பேசிய கிருஷ்ணமூர்த்தி, “தமிழகம் முழுவதும் திருமணங்கள், சுப நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் செய்து வருகிறோம். கடந்த சில நாட்களாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. 

கம்பெனிகளிடம் கேட்டாலும் இருப்பு இல்லை. திருமண மண்டபங்களிலும் ஸ்டாக் காலியாக உள்ளது. மார்ச் 14 முதல் 16 வரை சுப முகூர்த்த நாட்களுக்கு ஆர்டர்கள் வந்துள்ளன. ஆனால் சிலிண்டர் இல்லாததால் விருந்தினர்களுக்கு சாப்பாடு போட முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது” என்றார்.

இதையும் படிங்க: ஒரே நாளில் 3 பாலியல் குற்றங்கள்... ஈரக்குலை நடுங்குது..! கொதித்துப் போன நயினார்..!!

அமைச்சர் சக்கரபாணி மற்றும் தலைமைச் செயலர் முருகானந்தத்திடம் இதை எடுத்துச் சொன்னதாகவும், சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வு இல்லை என்றும் அவர் கூறினார். “மத்திய அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். 

ஆனால் 10-15 நாட்களுக்கு மேல் ஆகலாம். எனவே, கேட்டரிங் நடத்துபவர்கள் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். விறகு அடுப்பு, கட்டை அடுப்பை பயன்படுத்தி சமைக்கலாம் என்று தலைமைச் செயலர் ஆலோசனை வழங்கினார்” என்று கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

திருமண மண்டபங்களில் குளிர்சாதன வசதி உள்ள இடங்களில் விறகு அடுப்பு பயன்படுத்த முடியாது என்று சங்கம் சார்பில் கூறியபோது, “இந்த பிரச்னைக்கு அமெரிக்க ஜனாதிபதியால் மட்டுமே தீர்வு காண முடியும்” என்று தலைமைச் செயலர் கூறியதாகவும் கிருஷ்ணமூர்த்தி சொன்னார். 

இதனால் கேட்டரிங் உரிமையாளர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். சுப நிகழ்ச்சிகளில் உணவு தயாரிப்பு பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த கேஸ் தட்டுப்பாடு மக்களின் திருமண சீசனை பெரிதும் பாதிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.
 

இதையும் படிங்க: மண்டை மேல இருக்குற கொண்டையை மறந்துட்டீங்களே பாஸ்... திமுக அமைச்சருக்கு எதிரான வழக்கில் வசமாக சிக்கிய பாஜக நிர்வாகி... நீதிபதி அதிரடி உத்தரவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share