மாதத்தின் முதல் நாளே இப்படியா?... ஒரே நாளில் பொதுமக்களை அதிரவைத்த இரட்டை அதிர்ச்சி...!
வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.46 உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக உயர்ந்து வரும் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, ஹோட்டல் மற்றும் தேநீர் கடை உரிமையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை இந்த மாதம் ரூ.46 உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல்கள் நிலவி வரும் சூழலில், இந்த விலை உயர்வு ஹோட்டல் மற்றும் தேநீர் கடை உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அந்த வகையில், இன்று 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.46 உயர்ந்து ரூ.3,283க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் ரூ.928.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: திருவான்மியூர் ரெய்டு..! வீட்டில் சிலிண்டர் ஸ்டாக்… அதிர்ச்சி தகவல்!
மேலும், 5 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிறிய சிலிண்டரின் விலையிலும் மாற்றம் செய்யப்படவில்லை. அது ரூ.344.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 47.5 கிலோ எடை கொண்ட பெரிய வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.114 உயர்த்தப்பட்டு ரூ.8,203க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வு பொதுமக்களை மட்டுமல்லாமல், வணிக நிறுவனங்களையும், குறிப்பாக தேநீர் கடைகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களையும் பெரிதும் பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
இதனிடையே, சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து ரூ.107.87 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.99.65 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, லாரி போக்குவரத்து கட்டணம் உயர்வதால் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அந்த வகையில், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்கள் மற்றும் வணிக வட்டாரங்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இதுதான் நீங்கள் செலுத்தும் 'தேர்தல் பில்'! வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை சாடிய ராகுல் காந்தி!