×
 

பாமகவில் அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்கள்.. கௌரவ தலைவர் ஜி.கே. மணியும் மருத்துவமனையில் அனுமதி..!

பாமக எம்எல்ஏ அருள் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஜிகே மணியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மேற்கு தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி எம்எல்ஏ அருளுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலைமைச் செயலகம் வந்த பாமக எம்எல்ஏ அருள் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அருள் நெஞ்சை பிடித்துக் கொண்டு விழுந்துள்ளார். உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாமகவின் முக்கிய அங்கமாக இருக்கும் பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நல குறைபாடு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நாளை சேலம் மற்றும் தர்மபுரியில் நடைபெறும் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் எழுச்சியுரை ஆற்ற உள்ள நிலையில், 2026 தேர்தல் முன்னேற்பாடாக கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காகவும், கட்சியை பலப்படுத்துவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், பாமகவின் எம்எல்ஏ அருள் மற்றும் கௌரவ தலைவர்கள் ஜி.கே மணி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிகழ்வால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாமகவிலிருந்து என்னை கழுத்தை பிடிச்சு தள்ளிட்டாங்க! அசிங்கமா இருக்கு... மனவேதனையில் ராமதாஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share