×
 

அச்சுறுத்தும் கிளாண்டர்ஸ் தொற்று...! மனிதர்களுக்கும் ஆபத்து... கால்நடை பராமரிப்பு துறையினர் கண்காணிப்பு..!

கிளாண்டர்ஸ் தொற்று காரணமாக குதிரை உயிரிழந்த நிலையில், கண்காணிப்பு தீவிரம் அடைந்துள்ளது.

கிளாண்டர்ஸ் என்பது குதிரை, கோவேறு கழுதை, கழுதை போன்ற கால்நடைகளை பாதிக்கும் ஒரு தீவிரமான பாக்டீரியா தொற்று நோயாகும். இது Burkholderia mallei என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த நோய் மிகவும் தொற்று தன்மை கொண்டது மற்றும் மனிதர்களுக்கும் பரவக்கூடிய ஜூனோடிக் நோய். இந்தியாவில் 2006ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் மீண்டும் தோன்றிய இந்த நோய், பல மாநிலங்களில் அவ்வப்போது பரவி வருகிறது.

சமீபத்தில் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெடிப்புகள் இந்த நோயின் அச்சுறுத்தலை மீண்டும் உணர்த்தியுள்ளன. இந்த நோய் கால்நடைகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்துவதோடு, பராமரிப்பாளர்கள், கால்நடை மருத்துவர்கள், உரிமையாளர்கள் போன்றோருக்கு ஆபத்தை விளைவிக்கிறது.

எனவே, இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு இந்த நோயை கட்டுப்படுத்தவும் ஒழிக்கவும் தேசிய அளவிலான செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மனிதர்களுக்கு இது தோல் வழியாகவோ, சளி படலங்கள் வழியாகவோ அல்லது சுவாசம் வழியாகவோ பரவலாம். காய்ச்சல், தசைவலி, தலைவலி, நுரையீரல் அழற்சி போன்ற அறிகுறிகள் ஏற்படும். சிகிச்சை இல்லாதபோது இது உயிருக்கு ஆபத்தானது. எனவே, இது பொது சுகாதார அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: என்னது..!! எலக்ஷன்ல சொந்த கட்சிக்காரங்களே காலை வாரிட்டங்களா..!! வெளியான ஷாக் தகவல்..!! பரிதாபத்தில் திமுக, அதிமுக..!!

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் பொதுமக்கள் சவாரிக்கு பயன்படும் குதிரை ஒன்று கிளாண்டர்ஸ் தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மனிதர்களுக்கு பரவும் ஆபத்தான கிளாண்டர்ஸ் தொற்றால் குதிரை உயிரிழந்த நிலையில், சென்னையில் 140க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறையினர் பரிசோதனை செய்து வருகின்றனர். 

இதையும் படிங்க: மனைவியுடன் தகராறு! கோவத்தில் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share