நெருங்கிய தேர்தல்... கண்காணிப்பு தீவிரம்..! பெரம்பூர் ரயில் நிலையத்தில் தங்க காசுகள் பறிமுதல்..!
பெரம்பூர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்று எடுத்துச் செல்லப்பட்ட தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள தீவிர நடவடிக்கைகள் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளன. குறிப்பாக, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தச் செயல்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகளை (Model Code of Conduct) கண்டிப்புடன் அமல்படுத்துவதன் மூலம், பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்வதைத் தடுத்து, நியாயமான மற்றும் அச்சுறுத்தல் இல்லாத தேர்தலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 2,283 பறக்கும் படைகளும், 2,221 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்கள் மூன்று ஷிப்டுகளாகப் பணியாற்றி, பேருந்து நிலையங்கள், சாலைச் சந்திப்புகள், டோல் பிளாசாக்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்கின்றன.
இதையும் படிங்க: ஆமா, நான் டேஞ்சர்தான்..! அதிரடியாக வீடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!
பொதுமக்கள், வியாபாரிகள், பயணிகள் ஆகியோரின் வாகனங்களை நிறுத்தி, சோதனை மேற்கொள்ளப்படுகிறது. சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 32 கிராம் கொண்ட தங்கக்காசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழ்நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் தங்கக்காசுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: வந்தாச்சு தேர்தல் திருவிழா..! விசிலுக்கு ஓட்டு போடுங்க மக்களே..! விஜய் வேண்டுகோள்..!