×
 

விமானம் விபத்தான இடத்தில் கொட்டிக் கிடக்கும் தங்கம்..! அள்ள அள்ள வரும் நகைகளால் அதிர்ச்சி..!

விமான விபத்து நடந்த இடத்தில் கட்டுமான தொழிலதிபர் ராஜு படேல் தலைமையிலான குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இறந்த பயணிகளின் விலை உயர்ந்த பொருட்களை தேடும் பணியில் படேல் குழுவினர் ஈடுபட்டனர்.

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் ஜூன் 12ல் நடந்த விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 274-ஆக அதிகரித்திருக்கிறது. விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் ஒருவரை தவிர அனைவரும் மரணம் அடைந்தனர். விமானம் வெடித்து சிதறியதால் அருகில் இருந்த பி.ஜெ. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்கள் பெரும் சேதம் அடைந்தது. விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள், சமையல் செய்வோர் என பலரும் பாதிக்கப்பட்டனர். விடுதியில் 33 பேர் இறந்திருப்பது உறுதி படுத்தப்பட்டு  இருக்கிறது.  

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ் ஜோஷி, ஜூன் 18, 2025 காலை 10:45 மணி வரை, 190 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் அவர்களின் உறவினர்களுடன் பொருந்தியுள்ளதாக உறுதிப்படுத்தினார்.

இதில் 123 பேர் இந்தியர்கள், 27 பேர் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்தவர்கள், 7 பேர் போர்ச்சுகல் நாட்டவர்கள், ஒருவர் கனடா நாட்டவர், மற்றும் 4 பேர் விமானத்தில் பயணிக்காதவர்கள் ஆவர். இதுவரை 157 பேரின் உடல்கள் அவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை பராமரித்தது யார்? பதறி அடித்து விளக்கம் சொன்ன துருக்கி..!

விபத்தின் தீவிரத்தால் பெரும்பாலான உடல்கள் எரிந்தோ அல்லது சிதைந்தோ காணப்பட்டதால், டிஎன்ஏ பரிசோதனை மூலமே அடையாளம் காண முடிந்தது. குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி, காந்திநகரில் உள்ள தடயவியல் ஆய்வகம் (FSL) மற்றும் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் (NFSU) குழுக்கள் இரவு பகலாக பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.

இந்த பரிசோதனைகளை துரிதப்படுத்த, மாநில அரசு மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். விபத்தில் ஒரே ஒரு பயணி, பிரிட்டிஷ் குடிமகனான விஷ்வாஸ்குமார் ரமேஷ், அதிசயமாக உயிர் தப்பினார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது வீடு திரும்பியுள்ளார்.

மேலும், முன்னாள் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி உட்பட பல முக்கிய நபர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ரூபானியின் இறுதி சடங்கு ராஜ்கோட்டில் மாநில மரியாதையுடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது விமான விபத்து நடந்த இடத்தில் கட்டுமான தொழிலதிபர் ராஜு படேல் தலைமையிலான குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இறந்த பயணிகளின் விலை உயர்ந்த பொருட்களை தேடும் பணியில் படேல் குழுவினர் ஈடுபட்டனர். இதில் 100 சவரன் அளவுள்ள கிட்டதட்ட 800 கிராமுக்கும் மேற்பட்ட தங்க நகைகள், 80 ஆயிரம் ரொக்கம், பாஸ்போர்ட்கள், பகவத்கீதை புத்தகம் மீட்கப்பட்டுள்ளது.  இவை அனைத்தையும் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட அனைத்து உடைமைகளும் ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது. 

உறவினர்களிடம் விரைவில் திருப்பித் தரப்படும் என்றும் உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார். இதே ராஜு படேல் தலைமையிலான குழு தான் ஆமதாபாத்தில் கடந்த 2008ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பின் போதும் மீட்பு பணியில் ஈடுபட்டது. 

இதையும் படிங்க: காயமடைந்த மாணவர்களுக்கு இழப்பீடு எங்கே? இந்திய மருத்துவ சங்கம் கடிதம்.. ஏர் இந்தியா ரெஸ்பான்ஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share