சட்டம் ஒழுங்கு! நிதி பிரச்னைக்கு காரணம் முந்தைய அரசுதான்! திமுகவுக்கு குட்டு! கவர்னர் அர்லேகர் உரையில் தகவல்!
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்குப் போதைப் பொருள் நடமாட்டமே காரணம் என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டு இருந்தது.
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது. கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் உரை தொடர்பாக சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், இந்த முறை ஆளுநர் முழு உரையையும் வாசித்தது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆளுநர் உரையில் மாநில நிதிநிலை, மத்திய-மாநில உறவுகள், பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. குறிப்பாக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு போதைப்பொருள் நடமாட்டமே முக்கிய காரணமாக இருப்பதாகக் கூறப்பட்டிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உரையில், கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடும் கடத்தலும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டது. முந்தைய ஆட்சிக்காலத்தில் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், அதுவே தற்போதைய நிலைமை மோசமடைய காரணமாக அமைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஒன்றிய அரசு! தந்தை பெரியார்! அம்பேத்கார்!! உரையை மாற்றாமல் படித்த ஆளுநர் அர்லேகர்! சுமூக தொடக்கம்!
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் ஒழிப்பு பணிகளுக்காக தனி பிரிவுகள் அமைக்கப்பட உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார். இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து காப்பது அரசின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருக்கும் என்றும் உரையில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ‘சிங்கப்பெண் படை’ அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
மக்கள் நலன் மற்றும் சமூக பாதுகாப்பை முன்னிறுத்தி, கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் அறிவித்தார். இந்த நடவடிக்கை போதைப்பொருள் மற்றும் மதுப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
இதனுடன், தமிழகத்தின் நிதிநிலை கடந்த சில ஆண்டுகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும் உரையில் குறிப்பிடப்பட்டது. இருப்பினும் மக்கள் நலத் திட்டங்கள் எந்த பாதிப்புமின்றி தொடரும் என அரசு உறுதியளித்துள்ளது. ஆளுநர் உரையில் இடம்பெற்ற இந்த கருத்துகள், சட்டப்பேரவையின் முதல் நாளிலேயே அரசியல் சூழலை பரபரப்பாக்கியுள்ளன.
இதையும் படிங்க: முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து!! மு.க.ஸ்டாலின் முட்டி மோதியதை சைலண்டாக சாதித்த விஜய்!!