×
 

சென்னையில் பறவை காய்ச்சல்..! கொத்து கொத்தாக மடியும் காகங்கள்… சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு..!

சென்னையில் காகங்கள் கொத்து கொத்தாக மடியும் நிலையில் பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில வாரங்களாக காகங்கள் கொத்து கொத்தாக இறக்கும் நிகழ்வு பெரும் கவலையை ஏற்படுத்தியது. இந்த மர்மமான பறவை இறப்புகள் முதலில் அடையாறு பகுதியில், குறிப்பாக இந்திரா நகர் பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள தெருக்களில் அதிகம் பதிவாகின. மரங்களில் இருந்து நேரடியாக விழுந்து இறப்பது, சில நாட்களில் திடீரென பல காகங்கள் செத்துக் கிடப்பது போன்ற காட்சிகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தின.

சில இடங்களில் ஒரே நாளில் 30க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த இறப்புகளின் காரணத்தை கண்டறிய தமிழ்நாடு கால்நடைத் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது. அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இறந்த காகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பூபால் நகரில் உள்ள ICAR ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.

அங்கு நடத்தப்பட்ட சோதனைகளில் அதிக ஆபத்துள்ள H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உறுதிப்படுத்தல், மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மத்திய மீன்வளம், கால்நடைத் துறை மற்றும் பால் துறை அமைச்சகம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதி, இந்த H5N1 தொற்று காகங்களில் உறுதி செய்யப்பட்டிருப்பதால், மாநிலம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் பயோசெக்யூரிட்டி நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: H.ராஜாவுக்கு என்ன ஆச்சு?! மேடையிலேயே மயங்கி சரிந்ததால் பரபரப்பு! அப்போலோவில் அட்மிட்!

குறிப்பாக, இறந்த பறவைகளை ஆழமாக புதைப்பது, பாதிக்கப்பட்ட இடங்களை சுத்தப்படுத்துவது, கோழிப்பண்ணைகள் மற்றும் பிற பறவைகளில் தொற்று பரவாமல் தடுப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி மற்றும் கால்நடைத் துறை அதிகாரிகள் தற்போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இதையும் படிங்க: 36வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்...! குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share