புயலை கிளப்பிய HARD DISK திருட்டு..! கைதானவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!!
Hard disk திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டதற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை அண்ணாசாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்கள் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில்தான் மாநிலம் முழுவதும் நடைபெறும் மின்சார வாரிய டெண்டர்கள், நிலக்கரி கொள்முதல், மின்சார உபகரணங்கள் வாங்குதல் உள்ளிட்ட முக்கிய நிர்வாக ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், டெண்டர்கள் மற்றும் கொள்முதல் தொடர்பான முக்கிய தகவல்கள் சேமிக்கப்பட்டிருந்த 18 ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போயிருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் சிபிஐ விசாரணை தேவை என்றும் பலர் வலியுறுத்தி வந்தனர். ஹார்ட் டிஸ்குகள் காணாமல் போனது குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி கோபிநாத் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கோபிநாத்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாமக தீர்மானங்களுக்கு திமுக ஆதரவு! அன்புமணி ராமதாஸுக்கு போன் செய்த மு.க.ஸ்டாலின்!
விசாரணையில் கணினிகளை சரிபார்க்கும் தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியரான கோபிநாத், பெங்களூருவில் ஹார்டு டிஸ்குகளை விற்றது அம்பலமானதாக கூறப்பட்டுள்ளது. அவர் 18 ஹார்டு டிஸ்க்குகளை விற்கவில்லை என்பதும் 35 டிஸ்க்குகளை தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.70 ஆயிரத்துக்கு விற்றதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: செந்தில்பாலாஜி சிக்க காரணமே அந்த ஹார்டு டிஸ்க் தான்! பற்ற வைத்தார் சவுக்கு சங்கர்!