×
 

திடீர் ட்விஸ்ட்...!! - மின்வாரிய ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்... தமிழக அரசுக்கு இடியை இறக்கிய காவல்துறை...!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து திருடப்பட்ட ஹார்ட் டிஸ்குகளில் இருந்த தரவுகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் கணினிகளில் இருந்து ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்டதாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை விசாரிப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கோபிநாத் மற்றும் முரளி மனோகர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இதனை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுமாறு டிஜிபி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சென்னை காவல்துறையின் விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 18 ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மேலும், விசாரணையின் போது மொத்தம் 34 ஹார்ட் டிஸ்குகள் மீட்கப்பட்டதாகவும், அவற்றிலிருந்து தற்போது தரவுகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மக்களால் நடந்த மாற்றம்..!! நாளையுடன் ஒரு மாதம் நிறைவு..!! விஜய்யின் தவெக ஆட்சி எப்படி இருக்கு..?? ஒரு பார்வை..!!

குறிப்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் ஹார்ட் டிஸ்குகளில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்கிடமான அல்லது குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தக்கூடிய எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஹார்ட் டிஸ்குகளில் ஊழல் தொடர்பான ஆதாரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் இருப்பதாக பல்வேறு தகவல்கள் பரவியிருந்த நிலையில், காவல்துறையின் ஆய்வில் அத்தகைய தகவல்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், அழிக்கப்பட்டிருந்த தரவுகளை மீட்டெடுத்து ஆய்வு செய்தபோதும், சட்டவிரோத நடவடிக்கைகள் அல்லது குற்றச்சாட்டுகளுக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாகவும் இதுபோன்ற ஹார்ட் டிஸ்க் திருட்டுகள் நடைபெற்றிருந்ததாகவும், ஆனால் அவை குறித்து புகார் அளிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மீட்கப்பட்ட ஹார்ட் டிஸ்குகளில் இருந்த தரவுகள் அழிக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றை வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கோபிநாத் என்பவர் தொடர்ச்சியாக இத்தகைய திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் என்றும், மின்வாரிய அலுவலகங்களில் இருந்து ஹார்ட் டிஸ்குகளை திருடி விற்பனை செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இதற்கு முன்பு ஏன் புகார்கள் அளிக்கப்படவில்லை என்பது குறித்தும் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதால், சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்ட அனைத்து ஆவணங்களும் இன்று அல்லது நாளை சிபிசிஐடிக்கு ஒப்படைக்கப்பட உள்ளன.

இதற்காக விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு, வழக்கின் முதல் கட்டத்திலிருந்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீட்கப்பட்ட ஹார்ட் டிஸ்குகளில் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தக்கூடிய எந்த ஆவணங்களும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கெத்தாக களமிறங்கும் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’..!! இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share