×
 

கூட்டுறவுத் துறை தேர்வு முடிவுகள்... ஒரு வாரம் தான் டைம்..!! தமிழக அரசே கெடு விதித்த ஹைகோர்ட்...!

கூட்டுறவுத்துறை பணிகளுக்காக நடந்த நேர்முகத்தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவுத் துறையில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி ஆள்சேர்ப்பு தொடர்பான போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில், இறுதி முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தற்போது தமிழக அரசு மற்றும் தேர்வர்களிடையே பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.

இந்த ஆள்சேர்ப்பு செயல்முறை 2025 ஆகஸ்ட் 6-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் தொடங்கியது. மாநில ஆள்சேர்ப்பு நிலையம் மற்றும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்ட பின்னர், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.

நேர்முகத் தேர்வு முடிந்த பிறகும் இறுதி தரவரிசைப் பட்டியல் அல்லது முடிவுகள் வெளியாகாததால் தேர்வர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில், தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடக் கோரி பல தேர்வர்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் முன்பு பிப்ரவரி 2026-இல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: INS அஞ்சதீப்..! நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு..!!

இதேபோல், தேர்வு முடிவுகள் தாமதமாவதால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறி, கூட்டுறவுத் துறை உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியிட வழக்கு தொடரப்பட்டிருந்தது. நேர்முகத்தேர்வு முடிந்த ஆறு மாதங்கள் கடந்து முடிவுகளை வெளியிடவில்லை என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கூட்டுறவுத்துறை பணிகளுக்கான நேர்முகத்தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதையும் படிங்க: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..! சென்னையில் 28.30 லட்சம் வாக்காளர்கள்..!! முழு விவரம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share