நீலகிரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை... காரணம் இதுதானாம்; வெளியான முக்கிய அறிவிப்பு!!
நீலகிரி மாவட்டத்தில் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமாகி உள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரி,கோவை மாவட்டங்களுக்கு இன்று மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் என்பது விடுக்கப்பட்டது.
நாளை மற்றும் நாளை மறுநாள் என்று 2 நாட்கள் நீலகிரி மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாளையும், நாளை மறுநாளும் நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீலகிரியை சிதைக்கும் மழை.. மண் சரிவு..! முகாம்களுக்கு செல்லும் மக்கள்..!!
இதனால் நீலகிரி மாவட்டத்துக்கு பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். இந்த நிலையில் தான் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நாளை சனிக்கிழமை என்பதால் அரசு பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தனியார் பள்ளிகள் நாளை செயல்படலாம். இதனால் அனைத்து பள்ளிகளுக்கும் முன்னெச்சரிக்கையாக விடுமுறை வழங்க மாவட்ட கல்வி அலுவலர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ரெட் அலர்ட் எதிரொலி... சவாரி, தொட்டப்பெட்டா சிகரம், பைன் பாரஸ்ட் செல்ல தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!