பவன் கல்யாண் வருவதை எதிர்க்கலாமா? மீரு எவரண்டி.. பதில் செப்பண்டி.. H.ராஜா தடாலடி..!
பவன் கல்யாணம் ஏன் வருகிறார் என்று கேட்கிறீர்களே., தமிழர்கள் எனக் கூறும் பீட்டர் அல்போன்ஸ், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் திருநீறு பூசிக் கொள்வார்களா என எச். ராஜா கேள்வி எழுப்பினார்.
மதுரையில் பாஜக சார்பில் முருக பக்தர்கள் மாநாடு மிக பிரம்மாண்டமாக நாளை நடைபெறுகிறது. இந்த நிலையில், முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர்பாபு தான் கூறியிருக்க வேண்டும் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது அனைவரும் செல்லுங்கள் என., ஆனால் அவர் தங்களது நடத்துவதால் சங்கிகள் மாநாடு எனக் கூறுவதாக தெரிவித்தார்.
நாங்கள் சங்கிகள் என்றால் நீங்கள் மங்கிகள் எனக் கூறிய அவர், பழனியில் தாங்கள் நடத்தியது தான் முருக பக்தர் மாநாடு என கூறுவதாகவும் அந்த மாநாட்டில் இறுதியாக பேசிய உதயநிதி ஸ்டாலின், இதோ ஆன்மீக மாநாடு அல்ல என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரண்டு போச்சு திமுக.. சும்மா ஏதாச்சு பேசாதீங்க! லெப்ட் ரைட் வாங்கிய நயினார்..!
அது ஆன்மீக மாநாடு அல்ல என்றால், நாத்திக மாநாடா, தி.க மாநாடா என்றும் சமூக விரோதிகள் மாநாடு எனவும் விமர்சித்தார். தாங்கள் அரசியல் தொடர்பாக பேச விரும்பவில்லை ஆனால் தங்களை பேச வைப்பதாக கூறிய எச்.ராஜா, பவன் கல்யாண் ஏன் வருகிறார் என்று கேட்கிறார்கள்., பீட்டர் அல்போன்ஸ் தமிழர் தானே., ஜவஹிருல்லா., ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் தமிழர்கள் தானே., எனவே திருச்செந்தூர் முருகன் வழிபடுவார்களா என்ற கேள்வி எழுப்பினார்.
தமிழ் கடவுள் முருகனை ஏற்றவர்கள் மட்டுமே தமிழர்கள் என திருமாவளவனின் சேகர்பாபுவும் பேசி வருகிறார்கள் என்றும் திருமாவளவன் என்ற தீய சக்தியை முஸ்லிம் குழுவை வைத்துக்கொண்டு முருக பக்தர்கள் மாநாட்டை எதிர்ப்பதாகவும் மொழியின் ரீதியாக இந்துக்களை பிரிக்க பார்ப்பதாகவும் குற்றம் சாட்டினார். தமிழர் கடவுள் முருகனை கும்பிடாதவர்கள் அனைவரும் தமிழர்கள் அல்ல எனக் கூறும் தைரியம் வருமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: முருகனுக்கே தமிழ் இல்லையா.. எல்லாம் வரலாற்று கொடுமை! கொதித்தெழுந்த சீமான்!!