அடுத்த 2 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில்.... வானிலை மையம் கொடுத்த அதிரடி அலர்ட்!!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று இரவு 8.30 மணி வரை விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், திருச்சி, திருப்பூர், திண்டுக்கல், கோவை, நீலகிரி, தென்காசி, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, விருதுநகர், குமரி, திருப்பத்தூர் உள்பட 28 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியான வானிலை அறிவிப்பில், தற்போது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிங்க: மக்களே உஷார்!! கொட்டித்தீர்க்கப்போகும் மழை; சாலைகளில் நீர் தேங்க வாய்ப்பு... வானிலை மையம் அலர்ட்!!
ஜூன் 4 முதல் 8 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: கரையைக் கடந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… மாலை வலுவிழந்து தாழ்வு மண்டலமாக மாறும்!!