அடுத்த 2 மணி நேரம்... 7 மாவட்டங்களில்... வானிலை மையம் சொல்வது என்ன?
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. பருவமழையானது வழக்கமான ஜூன் மாதம் தொடக்காமல் அதற்கு முன்னதாகவே தொடங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது.
அதன்படி, கோவை, நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இடையிடையே தமிழகத்தின் சென்னை, மதுரை, ராமநாதபுரம், திருப்பூர், தூத்துக்குடி என பரவலாக மழை பெய்தது. பின்னர் கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்தி எடுக்கிறது. நேற்றும் தமிழகத்தில் மதியம் வரை வெயில் அடித்தது. பின்னர் காற்றுடன் கூடிய் மழை பெய்தது.
இதையும் படிங்க: உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. பயம் காட்டும் தமிழ்நாடு வெதர்மேனின் அலர்ட்!!
சென்னையிலும் நேற்று மாலை பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும் காலையில் பெரும்பாலான இடங்களில் வெயில் சுட்டெரித்தது. இதனிடையே சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று மாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இதுக்குறித்த வானிலை மைய அறிவிப்பில், தமிழகத்தில் இன்று மாலை 4 மணி வரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொத்துக்கிட்டு ஊத்த போது வானம்... தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!