×
 

பாக்ஸ் சிலிகா கூட்டமைப்பில் இணைந்தாச்சு!! பொருளாதார பாதுகாப்பு உறுதி! இந்தியா - அமெரிக்கா பிரதிநிதிகள் கையெழுத்து!

பாக்ஸ் சிலிகா கூட்டமைப்பில் இந்தியா இணைவதற்கான முக்கிய ஒப்பந்தம் இன்று டில்லியில் கையெழுத்தானது. இதில், இந்தியா - அமெரிக்கா பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர்.

டெல்லியில் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்ச்சியில், இந்தியா அமெரிக்கா தலைமையிலான 'பாக்ஸ் சிலிகா' (Pax Silica) கூட்டமைப்பில் இணைந்தது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அமெரிக்க பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர் ஜேக்கப் ஹெல்பெர்க் முன்னிலையில் இன்று (பிப்ரவரி 20, 2026) 'பாக்ஸ் சிலிகா பிரகடனம்' கையெழுத்தானது. இது செமிகண்டக்டர், ஏஐ உள்கட்டமைப்பு, முக்கிய கனிமங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பான விநியோக சங்கிலியை உறுதி செய்யும் வரலாற்று சிறப்பு ஒப்பந்தம்.

பாக்ஸ் சிலிகா என்பது அமெரிக்க தலைமையில் 2025 டிசம்பரில் தொடங்கப்பட்ட உலகளாவிய முயற்சி. சிலிகான் அடிப்படையிலான தொழில்நுட்பங்களின் (சிப், ஏஐ, மேம்பட்ட உற்பத்தி) விநியோக சங்கிலியை பாதுகாப்பாகவும், நம்பகமாகவும், புதுமையுடனும் கட்டமைப்பதே இதன் நோக்கம். 

ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், இஸ்ரேல், பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே உறுப்பினர்கள். இன்று இந்தியா இணைந்ததன் மூலம் இந்த கூட்டமைப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.

இதையும் படிங்க: இந்தியா அசுரத்தனமாக வளரும்! அடித்துச் சொல்லும் சுந்தர் பிச்சை!! AI டெக்னாலஜியில் மாஸ் காட்டப்போகும் இந்தியா!!

அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பேசுகையில், "இந்தியாவின் நுழைவு வியூக ரீதியாக மிக முக்கியமானது. சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட நாடு இந்தியா. இந்திய இன்ஜினியர்களின் பங்களிப்பு இந்த கூட்டமைப்புக்கு அத்தியாவசியம். முக்கிய கனிமங்களின் சுத்திகரிப்பில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது. இந்த ஒத்துழைப்பு வரும் ஆண்டுகளில் ஏஐ கண்டுபிடிப்புகளுக்கு பெரும் சக்தியாக அமையும்" என்றார்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: "1947-ல் இந்த ஒத்துழைப்பு இருந்திருந்தால் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்யலாம். 2014 முதல் இதற்கான பணிகள் நடக்கின்றன. 

இன்றைய தலைமுறையினர் பலன்களை அனுபவிக்கின்றனர். இந்திய இன்ஜினியர்கள் 2 நானோ மீட்டர் சிப்களை வடிவமைக்கின்றனர். செமிகண்டக்டர் துறைக்கு 10 லட்சம் திறமையானவர்கள் தேவை. அந்த திறமை இங்கேயே உள்ளது. மாணவர்களுக்கு இலவச செமிகண்டக்டர் டூல்கள் கிடைக்கின்றன. அதன் முடிவுகள் இப்போது தெரிகின்றன."

இந்த ஒப்பந்தம் மூலம் சிப் தயாரிப்புக்கு தேவையான மூலப் பொருட்கள், ஏஐ உள்கட்டமைப்பு ஆகியவை தடையின்றி கிடைக்கும். இது இந்தியாவின் 'ஆத்மநிர்பர் பாரத்' மற்றும் ஏஐ திட்டங்களுக்கு பெரும் ஊக்கம். உலக ஏஐ, செமிகண்டக்டர் துறையில் இந்தியா முன்னணி நாடாக உருவெடுக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த ஒப்பந்தம் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்கா தலைமையில் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் இணைப்பு இரு நாடுகளுக்கும் பொருளாதார பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும்.

இதையும் படிங்க: சோஷியல் மீடியா பயன்படுத்த வயது கட்டுப்பாடு!! செக் வைக்கும் மத்திய அரசு! அஸ்வினி வைஷ்ணவ் அதிரடி மூவ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share