#BREAKING நள்ளிரவில் பரபரப்பு... போலீசாரை தாக்கிவிட்டு கைதி தப்பியோட்டம்... ஈரோட்டில் நடந்தது என்ன?
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் காவல்துறையினரை தள்ளிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த 30 வயதான நரேஷ்குமார், கொலை மற்றும் மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
நேற்று, கோவை மத்திய சிறையில் இருந்து வழக்கு விசாரணைக்காக அவரை காவல்துறையினர் சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த பிறகு, மீண்டும் கோவை மத்திய சிறைக்கு காவல்துறையினர் அழைத்து வந்தனர்.
இரவு நேரமாக இருந்ததால், கோவை–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுள்ளிப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தேநீர் அருந்துவதற்காக வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ஜெயிலுக்குள் பதவிப்பிரமாணம்.. பாஜக கவுன்சிலரின் வித்தியாசமான பதவியேற்பு.. கேரள அரசியலில் பரபரப்பு!
அப்போது, காவலர் ஒருவரை தள்ளிவிட்டு நரேஷ்குமார் தப்பியோடியுள்ளார். இந்த சம்பவத்தில் காவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
தப்பியோடிய நரேஷ்குமாரை கைது செய்வதற்காக காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர் எங்கு பதுங்கியுள்ளார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், சிறைக்கு அழைத்துச் செல்லும் போது கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கைதியை கைது செய்வதற்காக காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பாட்டிலுக்கு 10 ரூபாய்... 27ம் தேதிக்கு பிறகு காத்திருக்கும் ட்விஸ்ட்... அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு...!