×
 

அமெரிக்க தூதரகத்தை தேடித்தேடி அழிக்கும் ஈரான்!! துபாய் தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்! அதிகரிக்கும் பதற்றம்!

துபாயில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் தூதரகத்தின் ஒரு பகுதி தீப்பற்றிக் கொண்டது; எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

துபாய்: ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இலக்குகளை குறிவைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, துபாயில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் (U.S. Consulate General) மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் தூதரக வளாகத்தில் ஒரு பகுதி தீப்பற்றிக் கொண்டது என்றாலும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேற்று இரவு நடந்த இந்தத் தாக்குதலில், சிறிய ட்ரோன் ஒன்று தூதரக வளாகத்தின் வெளிப்புற சுவரை தாக்கியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்து சில நிமிடங்களில் பரவத் தொடங்கியது. உடனடியாக துபாய் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. 

இதையும் படிங்க: குறிவைத்து அடிக்கும் ஈரான்! அமெரிக்க வீரர்கள் 6 பேர் பலி!! இஸ்ரேலில் 11 பேர் உயிரிழப்பு!

அமெரிக்க தூதரக ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீ கட்டுப்படுத்தப்பட்டு முழுமையாக அணைக்கப்பட்டது. தூதரகத்தின் முக்கிய கட்டிடங்களுக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் வெளியிட்ட அறிக்கையில், “துபாய் துணைத் தூதரகம் மீதான ட்ரோன் தாக்குதலை உறுதிப்படுத்துகிறோம். எங்கள் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சூழலை கண்காணித்து வருகிறோம்” என தெரிவித்தார். துபாய் போலீஸ் மற்றும் UAE அரசு அதிகாரிகளும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு பின்னால் ஈரான் ஆதரவு குழுக்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஈரான் ஏற்கனவே சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி மூடல், எண்ணெய் கப்பல்கள் சிக்கல் போன்றவை உலக பொருளாதாரத்தை பாதித்து வரும் நிலையில், இப்போது துபாய் போன்ற முக்கிய நகரத்தில் தூதரகம் மீதான தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா இதற்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. UAE அரசு இந்தத் தாக்குதலை கண்டித்து, தங்கள் நாட்டில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த சம்பவம் மேற்காசியாவில் போர் விரிவடைவதற்கான அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது. உலக நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வருகின்றன.

இதையும் படிங்க: இந்த 14 நாட்டை விட்டு உடனே வெளியேறுங்க! அமெரிக்கா ஆர்டர்! ஐக்கிய அரபு அமீரகம், சவுதி, கத்தார் என நீளும் லிஸ்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share