×
 

10 நாளில் இஸ்ரேலின் கதை முடிந்துவிடும்! வான் பாதுகாப்பு மையத்தை சல்லி சல்லியாக நொறுக்கிய ஈரான்..!

இஸ்ரேலிடம் பாதுகாப்பு தளவாடங்கள் பற்றாக்குறையால், அந்நாடு வெறும் 10 நாள் மட்டுமே தாக்குப் பிடிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 7 நாட்களாக ஈரான் - இஸ்ரேல் இரு நாடுகளும் மாறி, மாறி தீவிர வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஏவுகணை மற்றும் ராக்கெட் குண்டுகளை சுமந்து சென்று, ஈரானின் அணு கூடங்கள், ராணுவ தளங்கள், ராணுவ அதிகாரிகளின் இருப்பிடங்களை தேடி கண்டுபிடித்து இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ச்சியாக குண்டு வீசி வருகின்றன.

பதிலுக்கு தரையில் இருந்து பறந்து சென்று தரைப்பகுதியை தாக்கி அழிக்கு சக்தி வாய்ந்த க்ரூஸ், பாலிஸ்டிக், ஹைபர் சோனிக் ஏவுகணை ரகங்களை வைத்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்கி வருகிறது.

இதுவரை நடந்த தாக்குதலில் ஈரானில் 300 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காயம் அடைந்துள்ளனர். அதே நேரம் இஸ்ரேலுக்கு இவ்வளவு இழப்பு இல்லை. ஈரானோடு ஒப்பிடும் போது இஸ்ரேல் முக்கியமான எந்த கட்டுமானங்களையும் இழக்கவில்லை.

இதையும் படிங்க: போரில் வெளிப்படும் குரூர முகம்.. ஈரானின் இரக்கமற்ற செயலால் கொதிப்பில் இஸ்ரேல்..!

இதுவரை 28 பேர் மரணம் அடைந்துள்ளனர். 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இத்தனைக்கும் கொத்து கொத்தாக ட்ரோன்கள், 400க்கும் அதிகமான ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் வீசி இருக்கிறது.

இருப்பினும் பெரிய சேதம் இல்லை. காரணம், இஸ்ரேலின் வலிமையான வான் தடுப்பு கவசங்கள் தான். உலக அளவில் பெயர் போன அயன் டோம், டேவிட் ஸ்லிங், ஆரோ-2, ஆரோ-3 என நான்கு ஏவுகணை தடுப்பு கவசங்கள் இஸ்ரேலிடம் உள்ளன. பேட்ரியாட்ஸ், தாட் மற்றும் ஏவுகணை தடுப்பு போர் கப்பலையும் இஸ்ரேலுக்காக அமெரிக்கா நிலை நிறுத்தி உள்ளது.

இவ்வளவு பெரிய வான் தடுப்பு கவசம் இஸ்ரேலுக்கு இருப்பதால் தான் ஈரான் அளவு பேரிழப்பை சந்திக்கவில்லை. ஆனால் இவ்வளவு பாதுகாப்பான நிலை இன்னும் எத்தனை நாள் தொடரும் என்பது தான் இப்போது இருக்கும் மிகப்பெரிய கேள்வி. காரணம், இஸ்ரேல் வசம் இருப்பு இருக்கும் இடைமறிப்பு ஏவுகணைகள் வேகமாக குறைந்து வருகின்றன.

அதாவது, ஈரான் இதுவரை 400க்கும் அதிகமான சக்தி வாய்ந்த ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி இருக்கிறது. ஈரான் வீசும் ஒரு ஏவுகணையை தடுக்க வேண்டும் என்றால், இஸ்ரேலில் இருக்கும் வான் தடுப்பு கவசங்கள் பல இடைமறிப்பு ஏவுகணைகளை ஏவி விடும். அவை நடுவானில் ஈரான் ஏவுகணைகள் மீது மோதி, அவற்றை தாக்கி அழித்து விடும். குறிப்பாக ராக்கெட் குண்டுகள், சிறிய ரக ஏவுகணைகளை தடுக்க அயன்டோம் உதவும்.

நடுத்தரமான ஏவுகணைகளை டேவிட் ஸ்லிங் பார்த்துக்கொள்ளும். சக்தி வாய்ந்த நீண்ட தூர ஏவுகணைகளை ஆரோ-2, ஆரோ-3 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் துவம்சம் செய்யும். இஸ்ரேல் மீது ஈரான் வீசும் ஏவுகணைகள் எல்லாமே நீண்ட தூரம் சென்று தாக்கு சக்தி வாய்ந்த ஏவுகணைகள். இவற்றை பெரும்பாலும் இடைமறித்து அழிப்பது ஆரோ-2, ஆரோ-3 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் தான். 6 நாட்களாக தொடர்ந்து இஸ்ரேலை ஈரான் தாக்கி வருகிறது. 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி இருக்கிறது.

குறிப்பாக இரவு முழுவதும் இஸ்ரேலின் வான் தடுப்பு கவசங்கள் பிஸியாக இருக்க வேண்டிய நிலை உள்ளது. அதிலும் ஆரோ-2, ஆரோ-2 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் ஏராளமான இடைமறிப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி விட்டன. இதனால் அவற்றுக்கான இடைமறிப்பு ஏவுகணைகளுக்கு இப்போது கடும் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. இது தொடர்பாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்னும் அமெரிக்காவின் புலனாய்வு ஊடகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அதாவது, ஈரான் 6 நாட்களாக நடத்தி வரும் தாக்குதலை போல் தினமும் ஏவுகணை தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலால் 10 முதல் 12 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது. ஆரோ தடுப்பு சிஸ்டங்களுக்கான இடைமறிப்பு ஏவுகணை முற்றிலும் காலியாகி விடும். ஈரான் ஏவுகணைகளை இடைமறிக்க இஸ்ரேலிடம் ஒன்றும் இருக்காது. நிராயுத பாணியாக நிற்க வேண்டிய நிலை வரும். அது மட்டும் நடந்தால், ஈரானின் சக்தி வாய்ந்த போர் விமானங்கள் இஸ்ரேலின் கட்டமைப்புகளை சல்லி சல்லியாக நொறுக்கி விடும்.

இதனால் தான் ஈரானின் ஏவுகணை உற்பத்தி கூடங்கள், ஏவுகணை குடோன்களை குறி வைத்து தொடர்ச்சியாக இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசி வருகின்றன. ஈரான் வசம் இருக்கும் ஏவுகணைகளில் 40 சதவீதத்தை இப்போது அழித்து விட்டதாக இஸ்ரேல் சொல்கிறது. எஞ்சிய இருப்பை வேட்டையாட தொடர்ந்து குண்டு வீசுவோம் என்று எச்சரித்துள்ளது. அதே நேரம் ரகசிய இடத்தில் கற்பனை பண்ண முடியாத அளவு ஏவுகணைகளை ஈரான் பதுக்கி வைத்திருக்க கூடும் என்றும் சில தகவல்கள் சொல்கின்றன.

அடுத்த ஒரு வாரத்துக்குள் ஈரானின் ஏவுகணை சேமிப்பு கிடங்குகளையும், ஏவுகணை ஏவுதளங்களையும் மிகப்பெரிய அளவில் இஸ்ரேல் அழிக்காவிட்டால், அதற்கு பெரும் பின்னடைவு ஏற்படக்கூடும். அல்லது, அமெரிக்கா உடனடியாக களத்துக்கு வர வேண்டும். இஸ்ரேலுடன் இணைந்து ஈரானில் குண்டு மழை பொழிய வேண்டும். இது நடந்தால் ஈரானை வேகமாக பலவீனப்படுத்தி, வழிக்கு வர வைக்க முடியும்.  இல்லாவிட்டால், இன்னும் ஒரே ஒரு வழி தான் இருக்கிறது.

இஸ்ரேலுக்கு தேவைப்படும் இடைமறிப்பு ஏவுகணைகளை கொத்து, கொத்தாக அமெரிக்கா கொடுக்க வேண்டும். அவசர அவசரமாக இஸ்ரேலுக்குள் அவற்றை கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான் இப்போது போல ஈரானின் தாக்குதலை இஸ்ரேலால் சமாளிக்க முடியும். இல்லாவிட்டால் ஈரானுக்கு ஏற்படும் பேரிழப்பை போல் இஸ்ரேலும் பேரிழப்பை சந்திக்க வேண்டிய நிலை வரும். 

இதையும் படிங்க: சாக தயாராகுங்கள்! எந்த நாடும் தடுக்க முடியாத செஜ்ஜிஸ் ஏவுகணை..! இஸ்ரேல் மக்களுக்கு ஈரான் வார்னிங்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share