×
 

பாக்., நல்ல நண்பன்தான்!! ஆனா.. மத்தியஸ்தம் பண்ண தகுதி இருக்கா?! அமெரிக்காவுக்கு சாதகமாக பேசுவதாக புகார்!

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் நடந்த முதல்கட்ட பேச்சு தோல்வியில் முடிந்தது. இரண்டாம் கட்ட பேச்சு நடத்துவதற்கான முயற்சிகள் நடந்தன.

அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதிப் பேச்சு மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளது. ஈரான் தரப்பில் இருந்து அமெரிக்காவுக்கு மூன்று கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகள் பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஈரான் முன்வைத்துள்ள முக்கிய நிபந்தனைகள்:

  • ஈரான் மற்றும் லெபனான் மீது மீண்டும் எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது என்று அமெரிக்கா உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
  • இந்த முதல் நிபந்தனைக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டால் மட்டுமே, உலக எரிசக்தி வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்மூஸ் ஜலசந்தியை திறப்பது மற்றும் நிர்வகிப்பது குறித்து பேச முடியும்.
  • ஹார்மூஸ் ஜலசந்தியை முற்றுகையிடும் அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும்.

இந்த இரண்டு நிபந்தனைகளையும் அமெரிக்கா நிறைவேற்றினால் மட்டுமே, அணுசக்தி மற்றும் யுரேனியம் செறிவூட்டல் பிரச்சினை குறித்து பேச்சு நடத்தலாம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பேச்சுவார்த்தைக்கு போக வேண்டாம்! அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! முட்டுக்கட்டை போடும் ட்ரம்ப்!

தற்போது இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்ட பேச்சு பாகிஸ்தானில் தோல்வியில் முடிந்தது. இரு தரப்பும் மாறி மாறி நிபந்தனைகளை முன்வைப்பதால் பேச்சு முட்டுக்கட்டையில் உள்ளது.

இதற்கிடையே, ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி, பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்குக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “பாகிஸ்தான் நல்ல நண்பன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அமைதிப் பேச்சுக்கு மத்தியஸ்தராக செயல்படும் தகுதி அதற்கு இல்லை. பாகிஸ்தான் பெரும்பாலும் அமெரிக்காவின் நலன்களையே கருத்தில் கொள்கிறது. ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்படுபவரை நேர்மையான மத்தியஸ்தராக ஏற்க முடியாது” என்று அவர் கூறினார்.

ஹார்மூஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் உலக அளவில் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் உலகப் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஈரான் விதித்துள்ள கடுமையான நிபந்தனைகள், அமெரிக்க அதிபர் டிரம்ப் தரப்புக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் தொடங்கும் அபாயமும் நிலவுகிறது. சர்வதேச சமூகம் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. 

இதையும் படிங்க: மூனே நாள்தான்!! ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் வெடித்து சிதறும்!! அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share