பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? - டெல்லியில் பரபரப்பு மீட்டிங்...!
அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் சூழலில், அவரது இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் இன்று பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் சூழலில், அவரது இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும், பாஜக மூத்த நிர்வாகிகளையும் அண்ணாமலை இன்று சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் பாஜக தலைமையகத்திற்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனும் தற்போது டெல்லியில் உள்ளார்.
தற்போதைய பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி வந்துள்ளார். இன்று நண்பகலில் அவர் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து பேச உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலை விரைவில் தனிக்கட்சி தொடங்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. கட்சியில் அவருக்கான எதிர்கால பங்கு, புதிய பொறுப்புகள் வழங்கப்படுமா, அல்லது அவர் பாஜகவிலேயே தொடர்வாரா என்பது குறித்து ஆலோசனை நடைபெறலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: " தலைவா வா... தரணி ஆள வா"...! தாமரை சின்னம் இல்லாமல் வைரலாகும் அண்ணாமலை போஸ்டர்..!
மேலும், அவர் கட்சியை விட்டு விலகுவது தொடர்பான தனது நிலைப்பாட்டை தெரிவிக்கப் போகிறாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இதனுடன், ஜூன் 14 அல்லது 15 ஆம் தேதி மத்திய அமைச்சரவை மாற்றம் நடைபெறலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அண்ணாமலையின் டெல்லி பயணம் மத்திய அமைச்சரவை மாற்றம் தொடர்பான ஆலோசனைகளுக்காக இருக்குமா என்ற யூகங்களும் முன்வைக்கப்படுகின்றன. சந்திப்பு முடிந்த பிறகு அவர் இன்று தமிழகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின்னர், அவர் பாஜக தேசிய தலைவருடன் நடத்திய ஆலோசனையின் விவரங்கள் மற்றும் அவரது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து மேலும் தகவல்கள் வெளியாகலாம். மேலும், நாளை மறுநாள் அண்ணாமலையின் பிறந்தநாள் வருவதும் குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்புதான் நிதின் நபினும் தனது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். எனவே, பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காகவும் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கலாம் என்ற யூகங்களும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.”
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா..? அலட்சியம் காட்டாதீர்கள்..! அண்ணாமலை அட்டாக்..!!