ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!
ஆள்கடத்தல் வழக்கு விசாரணையில் முன்ஜாமின் கோரி பூவை ஜெகன் மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஜெகன் மூர்த்தி புரட்சி பாரதம் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். 2006இல் அரக்கோணம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட அவர், 2016 மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 2021இல் கே.வி.குப்பம் தொகுதியில் வெற்றி பெற்றார். கே.வி.குப்பம் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், காதல் திருமணம் செய்து வைத்தது தொடர்பான ஆள் கடத்தல் வழக்கு குறித்து விசாரிப்பதற்காக போலீசார் சென்றுள்ளனர். இதன் காரணமாக 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தி வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர். இதனால் ஜெகன் மூர்த்தியின் ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!
இந்த நிலையில், சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. எனவே, வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி அளித்த நிலையில் நாளை அவரது மனு விசாரிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: வெளியானது நீட் தேர்வு முடிவுகள்.. இணையதள வாயிலாக காண ஏற்பாடு..!