ஜெகன்மூர்த்தி MLA வீட்டில் போலீஸ் குவிப்பு...பதற்றம்.. பரபரப்பு!
கே.வி.குப்பம் எம். எல். ஏ. ஜெகன் மூர்த்தி வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதால் பதட்டமான சூழல் நிலவுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் செயல்படும் ஒரு அரசியல் கட்சி புரட்சி பாரதம். இது முக்கியமாக பட்டியல் சாதி மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.1978இல் டாக்டர் அம்பேத்கர் மன்றமாக தொடங்கப்பட்டு, 1998இல் புரட்சி பாரதம் கட்சியாக மாற்றப்பட்டது. இக்கட்சியின் நிறுவனர் பூவை. எம். மூர்த்தி மாரடைப்பால் மறைந்த பிறகு, அவரது சகோதரர் ஜெகன் மூர்த்தி கட்சியின் தலைவரானார்.
ஜெகன் மூர்த்தி 2002ஆம் ஆண்டு முதல் புரட்சி பாரதம் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். 2006இல் அரக்கோணம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட அவர், 2016 மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 2021இல் கே.வி.குப்பம் தொகுதியில் வெற்றி பெற்றார். கே.வி.குப்பம் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த வருகிறார்.
இதையும் படிங்க: சீட் தரேன்னு அதிமுக எழுதிக் கொடுத்தது உண்மை தான்…! அதிருப்தியில் பிரேமலதா?
இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால் கூறி அவரது வீட்டிற்கு போலீசார் விசாரணைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை பூந்தமல்லி அருகே நேமம் பகுதியில் உள்ள ஜெகன்மூர்த்தி வீட்டில் முன்பு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு இருப்பதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் சில ஏமாற்றங்கள்.. கொளுத்தி போடும் துரை வைகோ.!!