தாயன்புக்கு ஏஞ்கிய பஞ்ச்! குரங்கு குட்டியின் சோக வாழ்க்கை! இணைய வாசிகளின் ஏக்கத்தை தீர்த்து வைத்த வீடியோ!
தாயின் அரவணைப்பு இல்லாமல் பொம்மையை கட்டியணைத்தபடி சுற்றித்திரிந்து சமூக வலைதளங்களில் பிரபலமான ஜப்பான் குட்டி குரங்கு ' பஞ்ச் குன்' இறுதியாக தன் கூட்டத்துடன் இணைந்துகொண்டது.
ஜப்பானின் இச்சிகாவா சிட்டி உயிரியல் பூங்காவில் (Ishikawa City Zoo) பிறந்த மக்காக் வகை குரங்கு குட்டி ஒன்று தன் தாயால் நிராகரிக்கப்பட்டது. மக்காக் குரங்குகளில் தாய்கள் சில சமயம் குட்டிகளை கண்டுகொள்ளாமல் விடுவது வழக்கம் தான். ஆனால் இந்தக் குட்டிக்கு மாதங்கள் கடந்தும் தாய் அரவணைப்பு கிடைக்கவில்லை. பூங்கா ஊழியர்கள் அதை தனியாக பராமரித்தனர். அதற்கு 'பஞ்ச் குன்' (Punch-kun) என்று அழகிய பெயர் சூட்டினர்.
தனிமையை போக்க, ஊழியர்கள் ஆரஞ்சு நிற ஒராங்குட்டான் பொம்மை ஒன்றை கொடுத்தனர். பஞ்ச் குன் அதை தன் தாயாக எண்ணிக்கொண்டது. செல்லும் இடமெல்லாம் பொம்மையை இழுத்துச் சென்றது. அதை இறுக கட்டியணைத்து, அதன் மீது படுத்து உறங்கியது.
இந்த இதயம் தொட்ட காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி, உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றன. லட்சக்கணக்கானோர் பஞ்ச் குன்னை தத்தெடுக்க விரும்பி கருத்து தெரிவித்தனர். பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.
இதையும் படிங்க: மோடியின் அப்பா பற்றி விமர்சனம்!! உதயநிதிக்கு வலுக்கும் கண்டனம்! கிழித்து தொங்கவிட்ட பாஜக தலைவர்!
ஏழு மாதங்கள் கழித்து மகிழ்ச்சியான திருப்பம்! சமீபத்தில் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட புதிய வீடியோவில், பெரிய குரங்கு ஒன்று பஞ்ச் குன்னை இறுக அணைத்து அரவணைப்பதை காணலாம். பஞ்ச் குன் தன் கூட்டத்தால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பொம்மையை விட்டு விலகி, இயல்பான குரங்கு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது. இந்தக் காட்சி இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.
பஞ்ச் குன்னின் கதை தாய்-குழந்தை பாசத்தின் ஆழத்தையும், தனிமையின் வலியையும், இறுதியில் கிடைத்த அரவணைப்பின் மகிழ்ச்சியையும் உணர்த்துகிறது. பூங்கா ஊழியர்களின் அன்பும், பொம்மையின் துணையும் பஞ்ச் குன்னை உயிர்ப்புடன் வைத்திருந்தன. இப்போது உண்மையான கூட்டத்துடன் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்கிறது. இந்த இதயம் தொட்ட கதை உலகெங்கும் மக்களின் கண்ணீரையும் புன்னகையையும் ஒரே நேரத்தில் வரவழைத்துள்ளது.