×
 

இஸ்லாமிய வாக்கு வேண்டாம்..? நானா சொன்னேன்..? ஜெயக்குமார் கடும் கண்டனம்..!!

இஸ்லாமிய வாழ்க்கை இல்லாமல் ராயபுரத்தில் ஜெயிப்பேன் என ஜெயக்குமார் கூறியதாக பரவும் தகவல் பொய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார் எட்டாவது முறையாக அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவர் 1991 முதல் இந்தத் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு பல முறை வெற்றி பெற்றவர். கடந்த 2021 தேர்தலில் திமுகவின் ஐட்ரீம் மூர்த்தியிடம் சுமார் 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்த முறை திமுக சார்பில் சுபேர்கான் போட்டியிடுகிறார். இரு தரப்பிலும் "மண்ணின் மைந்தன்" என்ற அடையாளத்தை முன்வைத்து விவாதம் நடைபெற்று வருகிறது. ஜெயக்குமார் ராயபுரம் மக்களுடன் நெருக்கமாக இருப்பதாகவும், கடந்த ஆட்சியில் பல்வேறு பணிகளைச் செய்ததாகவும் உரிமை கோருகிறார்.

சுபேர்கான் தரப்போ, தான் தொடக்கத்தில் இருந்தே திமுகவில் வளர்ந்தவன், திராவிட ரத்தம் கொண்டவன் என்று பதிலடி கொடுத்து வருகிறார். ராயபுரம் தொகுதி சென்னையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு இஸ்லாமிய சமூகத்தினர் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இஸ்லாமியர்கள் வாக்கு இல்லாமலேயே ராயபுரம் தொகுதியில் வெற்றி பெறுவேன் என ஜெயக்குமார் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதையும் படிங்க: கே.சி வீரமணி பிரமாண பத்திரம் மீது ஆட்சேபனை... புகார் கொடுக்க வந்தவர்கள் மீது கடும் தாக்குதல்.!!

தான் கூறியதாக பரவும் தகவல் பொய் என ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். என்னுடன் நேரடியாக மோத முடியாத கோழைகள், இத்தனை வருடங்களாக ரத்தமும் சதையுமாய் பழகிக் கொண்டிருக்கும் தனது இஸ்லாமிய உறவுகளுடனான பிணைப்பை முறிக்க ஆசைப்பட்டு, குழந்தைத்தனமாக இதுபோன்று பதிவிடுவது சிரிப்பைத் தான் வரவழைக்கிறது என்று கூறினார். 

இதையும் படிங்க: #BREAKING: EPS வேட்பு மனு ஏற்பு..! சீமான், மா.சு., சேகர்பாபு மனுக்களும் ஏற்பதாக அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share