×
 

பாக்கியராஜை கலை வாரிசாக அறிவித்த MGR..! சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நெகிழ்ச்சி..!

மறைந்த இயக்குனர் பாக்கியராஜ் உடலுக்கு சபாநாயகர் பிரபாகர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தமிழக அரசியல் மற்றும் சினிமா உலகில் புகழ்மிக்க தருணங்களில் ஒன்று, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் இயக்குநர்-நடிகர் கே. பாக்யராஜை தனது கலை வாரிசு என்று அறிவித்த நிகழ்வு. அந்த அறிவிப்பு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆர் ‘மன்ற முரசு’ இதழின் ஆண்டு விழாவில் அல்லது ஒரு பொதுக்கூட்டத்தில், பாக்யராஜின் திறமை, கதை சொல்லும் வலிமை, பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் படைப்புகள் ஆகியவற்றைப் பாராட்டி, “பாக்யராஜ்தான் எனது கலை வாரிசு” என்று பகிரங்கமாக அறிவித்தார். இது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை உருவாக்கியது. ஏனெனில் எம்.ஜி.ஆர் போன்ற மக்கள் நாயகர், தனது கலைப் பரம்பரையை யாருக்கும் எளிதில் அளிக்காதவர். பாக்யராஜின் படைப்புகள் அவரை ஆழமாக ஈர்த்திருந்தன.

தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குனர் பாக்யராஜ் இன்று காலமானார். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த, மறைந்த இயக்குனர் பாக்கியராஜ் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தியுள்ளார். தமிழ் திரை உலகம் மீண்டும் ஒரு பெரிய இழப்பை சந்தித்துள்ளது. நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா என பல முகங்கள் கொண்ட கே. பாக்யராஜ் 73 வயதில் சென்னையில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு தனது முன்னாள் வழிகாட்டியும், இயக்குனர் இமயமுமான பாரதிராஜா மறைந்த சோகம் அடங்குவதற்குள் இந்த திடீர் மரணம் ஏற்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பாக்யராஜின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரை பிரபலங்களும் அரசியல் கட்சியினரும் இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சபாநாயகர் ஜே சி டி பிரபாகர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போது நெகிழசிப்பட ஒரு நிகழ்வினை பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க: "சூடு பிடிக்கும் பேரவை களம்"..! 4 நாட்கள் சட்டசபை கூடும்..! சபாநாயகர் அறிவிப்பு..!!

"எம்.ஜி.ஆர் பாக்யராஜை கலை வாரிசு என்று அறிவித்த அடுத்த நாள் ராமாபுரத்துக்கே நேரில் சென்று, `ஏன் இப்படி அறிவித்தீர்கள்?' என்று கேட்டேன் என்று கூறினார். அப்போது தன்னை காரில் அமர்த்தி, ராமாபுரத்தில் இருந்து தலைமை செயலகம் வரை பாக்யராஜை ஏன் கலையுலக வாரிசாக அறிவித்தேன் என்று காரணம் சொல்லிக்கொண்டே வந்தார் என தெரிவித்துள்ளார். பின்னர் நான் அந்த முடிவு சரிதான் என்று எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன் என்று சபாநாயகர் ஜெ.சி.டி.பிரபாகர் நெகிழ்ச்சி பட பேசினார். இயக்குனர் பாக்கியராஜை இழந்த வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறதாக கூறினார்.

இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் பதவி தப்பியது..! எடப்பாடி என்ன சொன்னாரு..? சபாநாயகர் பிரபாகர் பேட்டி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share