×
 

எதிரியும் எதிரியும் நண்பன்..? எப்படி..! தமிழ்நாடு ஏற்காது... ஜோதிமணி திட்டவட்டம்..!

திமுக மற்றும் அதிமுக கூட்டணி தொடர்பான பேச்சுக்கு ஜோதிமணி எம்பி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியான பிறகு அரசியல் களம் பெரும் பரபரப்பில் மூழ்கியுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய ஒற்றைக்கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எட்டாததால் ஆட்சி அமைப்பு சிக்கலாக மாறியுள்ளது.

இந்தச் சூழலில், நீண்டகால அரசியல் எதிரிகளான திமுக மற்றும் அதிமுக இணையும் வாய்ப்பு குறித்த செய்திகள் பரவத் தொடங்கின. இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. 

காங்கிரஸ் கட்சியின் சார்பில் கரூர் தொகுதியிலிருந்து எம்.பி.யாக இருக்கும் ஜோதிமணி, “எதிரிக்கு எதிரி நண்பன். ஓகே! எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? வரலாற்றுப் பிழை. தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என திமுக - அதிமுக கூட்டணி குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். இது பெரும் கவனத்தை ஈர்த்தது. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு? நாடாளுமன்றத்தில் இருக்கை மாற்ற கோரி கனிமொழி கடிதம்!

தேர்தல் முடிவுகளின்படி தவெக 108 இடங்களைப் பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவுடன் தவெக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே திமுக (சுமார் 59 இடங்கள் + கூட்டணிக் கட்சிகள்) மற்றும் அதிமுக (சுமார் 52 இடங்கள் + கூட்டணிக் கட்சிகள்) இணைந்தால் பெரும்பான்மை கிடைக்கும் என்கிற கணக்கு அரசியல் விவாதங்களில் இடம்பெற்றது. இத்தகைய கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக வெளியான தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விதமாகவே ஜோதிமணியின் பதிவு அமைந்துள்ளது. 

இதையும் படிங்க: தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரகசியப் பேச்சு?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share