கள்ளக்குறிச்சி மக்களே தயாரா??... அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்ன குட்நியூஸ்...!
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக அரசின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமாக தெரிவித்துள்ளதாகவும், அதுவே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தும் வகையிலும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரடியாக பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு கூட்டமும் நடத்தினார்.
தொடர்ந்து பிரிதிவிமங்கலத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில் , கல்வராயன் மலை பகுதியில் பெரும்பாலும் பழங்குடியினர் மக்கள் இருக்கக்கூடிய இடத்தில் சாலை வசதிகள் இன்னும் இல்லாமல் இருந்து வருவதாகவும், உள்ளாட்சித் துறைகளில் உள்ள சாலைகளை நெடுஞ்சாலைத்துறை கேட்டு பெற முடியும், அவ்வாறு கேட்டு பெற்று நபார்டு திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நெடுஞ்சாலைத் துறையில் உள்ள நிதியின் மூலமாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரிடம் பேசி எந்தெந்த சாலைகள் என மாவட்ட ஆட்சியரை ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளோம்.
கல்வராயன் மலையில் நீர்வீழ்ச்சிகள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கு சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் வகையில் நபார்டு திட்டத்தின் கீழ் சாலைகள் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு உள்ளதாகவும், கல்வராயன் மலையில் நிறைய கிராமங்களில் சாலை இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டு வருவதாகவும், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த சாலைகளை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்த பின் நெடுஞ்சாலைத்துறை கைப்பற்றி அந்த நபார்டு திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கப்படும் என்றும், கல்வராயன் மலையில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நாங்களும் அரசின் அதிகாரிகளும் கல்வராயன் மலையில் நேரில் ஆய்வு செய்து ஒன்று முதல் இரண்டு வருடங்களில் கல்வராயன் மலை வளர்ச்சிக்குரிய இடமாக மாற்றுவோம் என்றும், அந்த வளர்ச்சி அங்கு இருக்கக்கூடிய இளைஞர்கள் கள்ளச்சாராயம் தொழிலில் ஈடுபடுவதை முற்றிலும் ஒழிப்பதற்காக தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ”தைரியம் இருந்தா இதை நிரூபிச்சிக்காட்டுங்க...” - உதயநிதி ஸ்டாலினுக்கு நேரடி சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா...!
கோமுகி அணையின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் இது தொடர்பாக தெரிவிப்பதாகவும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16 துறைகள் சேர்ந்து பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது, அனைத்து துறைகளின் சார்பில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கலந்தாய்வு கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தேவை குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கும் பட்சத்தில் அனைத்து துறைகளுடன் இணைந்து கலந்தாய்வு கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்..
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் சரியான விளக்கம் அளித்திருப்பதாகவும், தமிழ்நாடு அரசு நிலைப்பாடு குறித்து அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமாக தெரிவித்துள்ளதாகவும், அதுவே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் மீது கூட்டு பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொறுத்த வரை தவறு யார் செய்தாலும் நடவடிக்கை எடுப்பார்கள்... காவல்துறை கட்சி சார்பற்று முழு சுதந்திரத்துடன் செயல்படும் என்றும், அது என்னவென்று தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் ஒரு மேயர் பதவியை கூட வெல்ல முடியாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு இது நிர்வாக ரீதியான கூட்டம் அதிகாரிகளுடன் இருக்கின்றார்கள் அரசியல் சார்ந்த கேள்விகள் இங்கு வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்...
இதையும் படிங்க: போதை பொருள் விற்றால் குண்டர் சட்டம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!